என்னது.. நடிகை ஸ்வர்ணமால்யா பற்றிய கிசு..கிசு.. பேச்சு… உண்மையா?

1990களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி தொலைக்காட்சி ஆங்கர் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக தனது பணியை ஆரம்பித்த ஸ்வர்ணமால்யா இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

1981இல் தமிழகத்தில் பிறந்தவர் இவர் சன் தொலைக்காட்சியில் பல புதுமையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக செயல்பட்டவர்.மேலும் பல தொலைக்காட்சிகளில் ஆங்கரிங் செய்து வந்த இவரது நிகழ்ச்சியை பார்த்து இயக்குனர் மணிரத்தினம் தனது படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

Swarnamalya

Swarnamalya

அடுத்து இவர் பல தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் சைட் ரோல் நிறைய செய்திருக்கிறார். ஆனால் இதுவரை கதாநாயகியாக நடிக்கவில்லை. சினிமா தனக்கு ஃபேஷன் இல்லை என்பதால் தான் அதிகமான படங்களில் இவர் நடிக்கவில்லை என்றும் கதாநாயகியாக மாறுவதற்கு முயற்சி செய்யவில்லை என்றும் இவரே கூறி இருக்கிறார்.

தரமான குடும்பத்தை சேர்ந்த இவர் கதாநாயகியாக இல்லாத சமயத்திலேயே அதிக அளவு ஆடை குறைப்பில் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் நிர்வாண படத்தில் நடித்ததாக சர்ச்சை எழுந்த போது அதற்கு எந்தவிதமான பதிலையும் இவர் தரவில்லை.

இவர் ஒரு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினார். அது என்னவென்றால் காஞ்சி மடத்தை சேர்ந்த அந்த நபருடன் தொடர்பில் இருப்பதாக பல செய்திகள் பரவியது. இதனை அடுத்து ஸ்வர்ணமால்யா கருத்துப்படி இவர் தீவிரமான கடவுள் பக்தியை கொண்டிருப்பவர். எனினும் கடவுள்களின் ஏஜெண்டுகளை நம்ப மாட்டார் என்று கூறியிருக்கிறார்.

Swarnamalya

Swarnamalya

சிறு வயதில் இருந்தே காஞ்சி மடத்துக்கு செல்லும் பழக்கம் இவருக்கு இருந்ததின் மூலம் தான் அந்த தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. காஞ்சி மடத்தில் இருந்தவர்கள் மூலம் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் இவர்கள் இருவரின் தொடர்பு பற்றி பத்திரிகைகளில் மற்றொரு பெயரில் எழுதி இருக்கிறார்.

போலீசால் விசாரணை செய்யப்பட்ட ஸ்வர்ணமால்யா ஆரம்பத்தில் தங்களுக்கு இடையே எந்த நெருக்கமும் இல்லை என்று தெரிவித்தார். அதன் பிறகு அடுக்கடுக்கான ஆதாரங்களை காட்டி கிடிக்குப்பிடியோடு விசாரித்த போது அவர் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கின்ற வீட்டிற்கு அந்த நபர் அடிக்கடி ஸ்வர்ணமால்யாவை வந்து சந்தித்ததாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இவருக்கு அவர் வீடு வாங்கி தந்ததாகவும் சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் இந்த தொடர்பில் இருந்த ஸ்வர்ணமால்யாவை அவரது கணவர் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்கிறார்.

 

Related Articles

Next Story