More
Categories: Cinema News latest news

பேசாமல் டாக்டர் தொழிலே பண்ணிட்டு போயிருக்கலாம்!.. சினிமாவை நம்பி ஏமாந்த நடிகர்கள்!..

செய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழி. அதற்கேற்றாற் போல நாம் செய்யும் தொழில் கண்ணும் கருத்துமாக இருந்தாலே லட்சியத்தை அடைந்து விடலாம். அதிலும் மருத்துவ தொழில் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது. அதை செய்பவர்களை கடவுளாக தான் கருதுகிறோம். சில சமயங்களில் உயிரை காப்பாற்றக் கூடிய வகையில் மருத்துவர்கள் தீவிரமாக செயல்படுகிறார்கள்.

அப்பேற்பட்ட தொழிலை படித்துக் கொண்டு சினிமா மீதுள்ள மோகத்தால் பல பேர் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்து விடுகின்றனர். நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதையும் மீறி அவர்களால் நினைத்த இடத்தை அடையமுடியாமல் போராடி வருகிறார்கள். அந்த வகையில் மருத்துவம் படித்து சினிமாவில் நடிக்க வந்து இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

Advertising
Advertising

நடிகர் அஜ்மல் அமீர் : கேரளாவை பூர்வீகமாக கொண்ட அஜ்மல் அமீர் தமிழில் அதிக அளவு பேசப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர். நெற்றிக்கண், கோ போன்ற படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால்
அனைவரையும் ஈர்த்தவர். தற்போது ‘தீர்க்கத்தரிசி’ என்ற படத்தில் சத்யராஜுடன் முதன் முறையாக இணைந்துள்ளார். நல்ல நடிப்பு, நல்ல நிறம், நல்ல உயரம் இருந்தும் இன்னும் சொல்லும்படியான வாய்ப்புகள் வந்து சேரவில்லை. உக்ரைனில் மருத்துவம் படித்த இவர் ஒரு மெடிக்கல் செண்டர் வைக்க வேண்டும் என்பது தான் இவர் விருப்பமாம். ஆனால் திடீரென சினிமாவிற்குள் பிரவேசித்து விட்டார்.

நடிகர் பரத் ரெட்டி : இவர் பல படங்களில் சப்போர்டிவ் கேரக்டரில் நடிப்பவர். முதன் முதலில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘உன்னைப் போல் ஒருவன்’ என்ற படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அண்ணன், குணச்சித்திர நடிகர் என வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பரத் ஒரு ஹீரோவை போன்ற லுக் இருந்தும் அவரால் நினைத்த இடத்தை அடைய முடியாமல் திணறி வருகிறார். இவரும்
மருத்துவ படிப்பை முடித்து தற்போது ஐதராபாத்தில் பயிற்சி பெற்று வருகிறாராம்.

நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன் :

ஒரு நன்கு பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவர் தான் பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன். சீனாவில் மருத்துவ முடிப்பை முடித்த பவர்ஸ்டார் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் தலையாய கனவாக இருந்தது. அவர் சொந்த தயாரிப்பிலேயே பல படங்களில் நடித்தார். ஆனால் மிகப்பெரிய நஷ்டத்தை தழுவ நேர்ந்தது. மேலும் ‘கண்ணா லட்டு திங்க ஆசையா’, ‘ஐ ’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் சென்னையில் ஒரு மருத்துவமனையை வைத்து கவனித்து வருகிறார் ஸ்ரீநிவாசன்.

நடிகர் சேதுராமன் : இவர் இப்பொழுது நம்மிடையே இல்லாவிட்டாலும் நடித்த படத்தின் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்தார். இவர் நடித்த ஒரே படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. இந்த படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து நடித்து அந்தப் படத்தின் மூலமாகவே
ஒரு புதுமுக நடிகர் வந்து விட்டார் என்ற அளவுக்கு பேசப்பட்டார். ஆனால் 35 வயதிலேயே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். தோல் மருத்துவரான இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி : தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் ஒரு மருத்துவ மாணவி. சினிமாவில் நுழைந்த பிறகு மருத்துவத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டார். ஆனால் மேலே குறிப்பிட்ட நடிகர்களை போல் இல்லாமல் இன்று வரை பலரால் தேடப்படும் நடிகையாகவே வளர்ந்து வருகிறார் சாய்பல்லவி. இன்னமும் இவரின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றது.

இதையும் படிங்க : அப்பவே கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படம்!.. பிரம்மாண்டத்தின் முழு உருவமே இவர்தானாம்!..

Published by
Rohini

Recent Posts