Connect with us
shankar

Cinema News

ரெண்டு மகள்களால் மன நிம்மதி போச்சே..! மிகுந்த வருத்தத்தில் நம்ம பிரமாண்டம்.!

இந்திய சினிமாவிற்கு பிரம்மாண்டம் என்றால் என்ன என்பதை தனது திரைப்படங்கள் மூலம் காட்டியவ காட்டியவர் நம்ம தமிழ் இயக்குனர் Mr.பிரம்மாண்டம். அவருக்கு தற்போது நல்ல காலம் இல்லை போல, அவர் எடுத்த தமிழ் படமும் பாதியில் நின்று போக, தற்போது தெலுங்கு பக்கம் தஞ்சம் அடைந்துள்ளார்.

தெலுங்கு பக்கம் பிரமாண்ட ஹீரோவை வைத்து படம் எடுத்து வருகிறார். அவருடைய மூத்த மகளுக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அந்த திருமண வரவேற்பு இன்னும் நடைபெறவில்லை. அதற்கான விழா ஏற்பாடு நடந்து அது பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது. காரணம் தம்பதியருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து போவதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் கசிந்து வருகிறது. அதனால்தான் வரவேற்பு விழா நின்று போனதாக கூறப்பட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

அதேபோல, இரண்டாவது மகள் கதாநாயகியாக ஒரு படத்தில் அறிமுகமாகி உள்ளார். தனது தந்தையிடம் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறேன் என்று  அனுமதி வாங்கி அந்த நாயகி  வீரமான அந்தப்படத்தில் கிராமத்தை ஹீரோயினாக நடித்து முடித்துவிட்டார்.

இதையும் படியுங்களேன் – யாரவது பேசுங்கயா.! வீடியோவை ரிலீஸ் செய்து ரசிகர்களை காண்டாக்கிய சிவகார்த்திகேயன் – அருண் விஜய்.! 

ஆனால், தந்தைக்கு சொல்லாமலே மேலும் நான்கு படங்களில் நடிக்க கமிட்டாகி விட்டாராம் அந்த இளம் நடிகை. இதை கேள்விப்பட்ட பிரம்மாண்டம் தற்போது டென்ஷனாகி உள்ளாராம். மூத்த மகள் திருமணம் இவ்வாறு இந்த நிலைமையில் உள்ளது. இரண்டாவது மகளும் தனது சொல் பேச்சை கேட்காமல் அடுத்தடுத்த படங்களை புக் செய்து வருகிறார் என்று மன வருத்தத்தில் இருக்கிறாராம். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top