Connect with us

துபாயில் கசக்கி பிழியப்படும் பிரபல நடிகைகள்… சிக்கிய புரோகர்.. போலீஸில் வலையில் டான்ஸ் மாஸ்டர்!..

latest news

துபாயில் கசக்கி பிழியப்படும் பிரபல நடிகைகள்… சிக்கிய புரோகர்.. போலீஸில் வலையில் டான்ஸ் மாஸ்டர்!..

முக்கிய பிரமுகங்கள் தங்களின் தேவைக்கு நடிகைகளை பயன்படுத்திக்கொள்ள

தமிழ் சினிமா வட்டாரத்தை ஆட்டம் காணும் செய்திருக்கும் புதிய வழக்கால் பிரபல முக்கிய புள்ளிகள் அதிர்ச்சியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. ஒரு பட வாய்ப்புக்காக நடிகைகளும் தாராளமாக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அந்த வகையில் பிரபல முக்கிய புள்ளிகள் நடிகைகளை சொந்த நாட்டில் வைத்து அபகரித்தால் பிரச்சினையாகிவிடும் என்பதற்காக துபாயை தேர்ந்தெடுத்துள்ளனர்.

தாங்கள் ஆசைப்படும் நடிகைகளை துபாய் கலைநிகழ்ச்சிகள் என சொல்லி அழைத்துச் சென்று விட வேண்டியது கோலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவரின் வேலைதான். அவர் அனுப்பும் நடிகைகளை அங்கு வைத்து அனுபவித்து விட்டு பெரிய தொகை கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது 50க்கும் அதிகமான துணை நடிகைகள் துபாயில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து நடிகைகளை சப்ளை செய்யும் ஷக்கில் என்பவரை காவல் துறை கைது செய்திருக்கிறது. அவரிடம் விசாரித்த போது, வாய்ப்புக்காக வரும் பெண்களை ஆசை காட்டி துபாய்க்கு கலைநிகழ்ச்சிகள் எனக்கூறி அழைத்து நின்று விடுவார்களாம். அங்கு பெரிய தலைகள் வந்து நடிகைகளுடன் ஆட்டம் போட்டு செல்வது தான் வழக்கம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த டான்ஸ் மாஸ்டர் யார், இந்த வழக்கில் சிக்கி இருக்கும் முக்கிய பிரமுகர்கள் யார் என்பது ஷகீலிடம் நடக்கும் மேற்படி விசாரணையில் தான் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகைகள் என்ற அந்தஸ்தும் இல்லாமல் துணை நடிகர்கள் என்ற அங்கீகாரமும் இல்லாமல் இருக்கும் பெண்கள் தற்போது துபாயில் சிக்கி இருக்கின்றனர்.

துபாய் ஷேக் அவர்களிடம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு பெரிய விலை பேசப்படுவதாக கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த வழக்கை உடனே துரிதப்படுத்த வேண்டும் என தமிழக காவல்துறைக்கு உத்தரவு பறந்து இருக்கிறதாம். சினிமா துறையில் இது போன்ற வழக்குகள் அடிக்கடி நடக்கும் நிலையில் தற்போது இந்த வழக்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விசாரணையில் முடிவில் துபாய்க்கு பறந்து சென்ற முக்கிய புள்ளிகள் குறித்தும், பிரபலங்கள் சிலரும் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top