Cook With Comali: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முக்கிய நடுவரான தாமு வீல்சேரில் வருவதற்கான விஷயம் குறித்து பேசி இருக்கிறார்.
சமையல் நிகழ்ச்சிக்கு ஒரு புதிய வடிவம் கொடுத்து வருவது விஜய் டிவியின் டாப் ரியாலிட்டி ஷோவாக இருக்கிறது குக் வித் கோமாளி. முதல் சீசன் தொடங்கும் போது ஒரு மாதிரியாக வரவேற்பை பெற்றாலும் அடுத்தடுத்த சீசனில் ஹிட்டடித்தது.
நான்கு சீசன்கள் எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் ஐந்தாவது சீசன் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தயாரிப்பு நிறுவனம் வெளியேற அவர்களுடன் முதலில் நடுவர்களான வெங்கடேஷ் பட் மற்றும் தாமு வெளியேறுவதாக அறிவித்தனர்.
ஆனால் ஒரு சில நிமிடங்களில் தாமு வீடியோவை வெளியிட்டு குக் வித் கோமாளியில் தொடர்வதாக அறிவித்தார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐந்தாவது சீசனிலே நடுவராக தாமு கலந்துக்கொண்டார்.
தற்போது ஆறாவது சீசனிலும் அவர் முக்கிய நடுவராக இருக்கிறார். இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னரே செஃப் தாமுவிற்கு பத்மவிபூஷன் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்த செஃப் தாமு வீல் சேரில் வந்து கொண்டு இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில், விருது விழாவிற்கு சென்ற போது படியில் இறங்கும் போது கால் பிசகி விட்டதால் சிகிச்சையில் இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. வெளியில் நடக்க தொடங்கி இருக்கிறேன். ஆனால் செட்டில் நிறைய ஏற்றம் இறக்கம் இருக்கிறது.
அதனால் தான் வீல் சேரில் வந்து கொண்டு இருக்கிறேன். இன்னும் 2 எபிசோட்களில் கூட பழையப்படி நடந்து சமையல் ஸ்டேஷன்களில் இருப்பேன். டான்ஸ் ஆடவும் செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். பல நாட்களாக இருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் நிலையில் தாமுவினை பாதுகாப்பாக இருங்கள் என்ற கருத்து வெளிவந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…