Categories: latest news

இதனால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்.. மனம் திறந்த சீரியல் நடிகை ஸ்ருத்திகா…

சன் டிவி நாதஸ்வரம் சீரியலில் நாயகியாக நடித்த ஸ்ருத்திகா சமீபத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஆரியனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து ஸ்ருத்திகா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நாதஸ்வரம். இதில் அவரின் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ருத்திகா. தொடர்ந்து திருமுருகன் இயக்கத்தில் பல சீரியலில் நடித்திருக்கிறார். இருவருக்கும் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டாலும் இவர் 2019 ஆம் ஆண்டு சனேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கோலங்காலமாக இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. பின்னரும் நடிகை ஸ்ருத்திகா சீரியலில் பிஸியாக நடித்து வந்தார். கல்யாண பரிசு, அழகு, மகராசி, வைதேகி, உறவுகள் சங்கமம், முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் தன்னுடன் மகராசி சீரியலில் நாயகனாக நடித்த ஆரியனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் முதலில் காதலிக்கின்றனர் என ரசிகர்கள் கிசுகிசுத்தாலும் அது குறித்து பேசாமல் இருந்தவர்கள் திடீரென தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர். தற்போது இந்த திருமணம் குறித்து ஸ்ருத்திகா மனம் திறந்து இருக்கிறார்.

என்னுடைய முதல் கணவர் சனேஷ் ரொம்ப நல்ல மனிதர். ஆனால் அவருக்கும் எனக்குமான திருமண உறவு நிறைய மன சங்கடத்தில் முடிந்தது. எங்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. என்னுடைய பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றாலும் நிறைய ஏமாற்றங்களை அதில் சந்தித்தேன். அவரை குறை சொல்ல நான் விரும்பவில்லை.

அதுபோலவே ஆரியனின் முதல் திருமணத்திலும் அவர் மனைவியுடன் இதே பிரச்சனை இருந்தது. பல பிரச்சினைகள் வந்த போதும் அவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க தான் நான் முயற்சி செய்தேன். ஆனால் அது கடைசிவரையும் ஒத்துப் போகவில்லை. அப்போதுதான் எங்கள் பெற்றோர் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமே என அறிவுரை செய்திருந்தனர்.

அதைத்தொடர்ந்தே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக ஸ்ருத்திகா தெரிவித்திருக்கிறார். நடிகர் ஆரியனின் முதல் மனைவியும், நடிகையுமான நிவேதா தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் சுரேந்தரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago