ஒன்னுல மூணு… புலம்பும் கோபி… ரோகிணியிடம் மோசமாக கேட்ட விஜயா.. அண்ணனுக்காக கதிர் எடுக்கும் ரிஸ்க்!..

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக மீனா குடும்பத்தினரிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர் நான் குழந்தைகள் மருத்துவமனைக்கு சாதாரண செக்கப்பிற்காக தான் சென்றேன் என ரோகிணி கூறிவிடுகிறார். பின்பும் மனோஜிடம் நாம குழந்தை பெற்றுக்கொள்ளலாம் எனக்கு அதுவே கனவா வருது என்கிறார்.

ஆனால் மனோஜ் எனக்கு மல்டி மில்லியனர் ஆக வேண்டும் என்பதுதான் கனவா வருது. எப்போ பொறக்குதோ பொறக்கட்டும் நான் எந்த ஹாஸ்பிடல் வரவில்லை என்கிறார். அப்போ நீ ஜீவா உடன் லிவ்விங்கில் இருந்தபோது குழந்தை பெத்துக்கிட்டியா என்கிறார் ரோகிணி. நானும் உன்னை அதையே கேட்டா உனக்கு எப்படி இருக்கும் என மனோஜ் கேட்க ரோகிணி அதிர்ச்சியாகி விடுகிறார்.

இவர்கள் சண்டையை விஜயாவிடம் கூட அவரும் ரோகினி இடம் வந்து இதையே கேட்கிறார். பாக்கியலட்சுமி தொடரில், எழில் எல்லோரும் பேசியதை நினைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ அங்கு வரும் அமிர்தா மற்றும் பாக்கியா இருவரும் இணைந்து அவரை சமாதானம் செய்கின்றனர். கோபி குடித்துவிட்டு வந்த ராதிகாவிடம் சண்டை போட்டுவிட்டு புலம்பி கொண்டு இருக்கிறார்.

பின்னர் ஜெனி மற்றும் செழியன் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜெனிக்கு வாந்தி வந்துவிட ஃபுட் பாய்சன் என செழியன் கேட்கிறார். இல்லை நான் கர்ப்பமாக இருக்க வேண்டும் என சந்தேகமாக இருப்பதாக கூறுகிறார். மெடிக்கல் சென்று பிரக்னன்சி கிட் வாங்கி வரக்கூறுகிறார். பிறகு கீழே வரும் ஜெனி வீட்டில் இந்த விஷயத்தை கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சரவணன் மற்றும் தங்கமயில் ரூம் கிடைக்காமல் ரோட்டில் நின்று கொண்டிருக்கின்றனர். தங்க மயிலின் அப்பா கால் செய்து ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டுமா என நக்கலாக பேசுகிறார். இதைத் தொடர்ந்து தங்க மயிலின் அம்மா, உன்னால பத்து ரூபா கொடுக்க முடியுமா என கேட்க, இப்ப நான் கேட்டதுனால மாப்பிள்ளை எப்படி கஷ்டப்பட்டாவது நம்ம பொண்ண அங்க தங்க வைத்து விடுவாரு என்கிறார்.

சரவணன் செய்வது தெரியாமல் கதிரிடம் இந்த விஷயத்தை கூற எப்படியாவது பணத்தை ரெடி செய்து தருவதாக கூறுகிறார். செந்தில்விடம் இந்த விஷயத்தை சரவணன் கூற அப்பாவிடம் இதை பற்றி கூற வேண்டாம் என கூறிவிடுகிறார்.

Related Articles
Next Story
Share it