பிரியங்காவை பழி வாங்க நினைத்தாரா அனிதா சம்பத்… உடைத்து பேசிய பிக்பாஸ் பிரபலம்!

Priyanka: மணிமேகலைக்கு எதிராக தற்போது பிரியங்கா தரப்பு களமிறங்கி இருக்கும் நிலையில் பிரபல பிக் பாஸ் பிரபலமான அமீர் பேட்டி கொடுத்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியை அடைய செய்திருக்கிறது.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக இருந்தது குக் வித் கோமாளி. மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியை கொடுத்த இந்த நிகழ்ச்சி தற்போது அடிமைத்தனம், பழிவாங்கும் படலம் என பல கெட்ட பெயர்களை குவித்திருக்கிறது.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கடந்த வாரம் தொகுப்பாளர் மணிமேகலை வெளியிட்ட புகார். ஆனால் அவருடைய புகார் வெளிவருவதற்கு முன்னரே இந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நிறைய தேவையில்லாத கண்டெண்டுகள் நிறைந்திருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

பொதுவாக குக் வித் கோமாளியில் பிறரை நோகாமல் கலாய்த்து ரசிக்க வைத்து வெற்றி பெற்றது. ஆனால் இந்த சீசன் தொடங்கியதிலிருந்து நிறைய தேவையில்லாத வார்த்தைகளை கோமாளி மற்றும் குக்குகள் பயன்படுத்தி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் அன்சிதா மற்றும் ராமர் பேசிக்கொண்டு வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த எண்ணத்தில் ரசிகர்கள் இருக்கும்போது தான் மணிமேகலை தன்னை போட்டியாளராக வந்த பிரபல தொகுப்பாளர் அடிமைப்படுத்துவதாக ஓப்பனாக பதிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து இந்த விஷயம் ரசிகர்களிடம் கொழுந்து விட்டு எரிந்தது. அதிலும் பிரியங்கா தேஷ் பாண்டேவுக்கு தான் விமர்சனம் மிகுந்த அளவுக்கு குவிந்தது.

இந்நிலையில் நேற்று இருந்து விஜய் டிவி பிரபலங்கள் ஒவ்வொருவராக வீடியோ வெளியிட்டு பிரியங்கா ரொம்ப நல்லவர். இந்த விஷயத்தில் மணிமேகலையின் பக்கம் தான் தப்பு இருப்பதாக பலவாறு பேசி வருகின்றனர். இதே நேரத்தில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொண்ட நடன இயக்குனர் அமீர் இந்த விஷயம் குறித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார்.

அவர் கூறுகையில், மணிமேகலையின் பதிவை பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. பிரியங்காவிற்கு அடுத்தவர்களை அடிமைப்படுத்து அதில் தான் குளிர் காய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. எந்த எண்ணமும் இல்லை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பட்டத்தை அவள் வென்ற அடுத்த நாளை இந்த பிரச்சனையை சந்திக்கிறார்.

இதனால் வெற்றி பெற்றதை கூட அவரால் கொண்டாட முடியவில்லை. தற்போது பிரியங்கா இந்தியாவிலும் இல்லை. மணிமேகலைக்கு ஆதரவாக பதிவிட்டு உள்ளவர்களை பார்க்கும்போது எனக்கு அவர்கள் இந்த விஷயத்திற்காக பதிவிடவில்லை. பிரியங்கா மீது இருக்கும் பழிவாங்கும் படலமாகவே பார்க்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார்.

மணிமேகலைக்கு ஆதரவாக பிரியங்காவை சாடி அனிதா சம்பத் மற்றும் அமீரை ஆதரவு கொடுத்த ஷைஜி ஆகியோர் கமெண்ட் செய்திருந்தனர். ஆனால் தற்போது அமீர் கூறும் போது அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்து வருகிறது. கஷ்டப்படும் நேரத்தில் கூட இருந்தவர்களை புகழுக்காக அமீர் தூக்கி எறிந்ததாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it