பிக்பாஸுக்கு முன்னரே கொளுத்தி போட்டது காவிய தலைவி...இதுக்கு தானா எல்லா பிரச்னையும்?

BiggbossTamil: தமிழ் பிக் பாஸின் போட்டியாளர்கள் குறித்த விவரம் வரிசையாக கசிந்து வருகிறது. இதில் தற்போது எண்ட்ரியாக இருக்கும் முக்கிய போட்டியாளர் குறித்த தகவலால் ரசிகர்கள் அதிர்ந்து உள்ளனர்.

தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முதல் இடத்தை பிடித்து இருக்கும் பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான போட்டியாளர் தேர்வு பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

முதல் முறையாக கமல்ஹாசன் விலகி இருக்கும் நிலையில் அவரிடத்தில் இருந்து விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார். அவர் எப்படி தொகுத்து வழங்குவார் என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் காத்திருக்கின்றனர். இதுவே நிகழ்ச்சியின் முதல் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் போட்டியாளருக்கு குறித்த விவரமும் பல யூகங்களுடன் வெளியாகி கொண்டு வருகிறது. எப்போதும் போல இந்த சீசனிலும் விஜய் டிவியின் ப்ராடக்ட்கள் நிறைய இறங்கி இருக்கின்றனர். செல்லமா சீரியல் ஹீரோ அர்ணவ், அன்சிதா, அருண் பிரசாத் உள்ளிட்டோர் இதில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தற்போது தொகுப்பாளர் மணிமேகலை கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கடந்த வாரம் தனக்கு சுயமரியாதை இருக்கிறது. அதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன். போட்டியாளராக இருக்கும் பிரபல தொகுப்பாளர் என்னுடைய வேலையை செய்ய விடாமல் அடக்குமுறை செய்வதாக தெரிவித்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து பிரச்சினை பல மடங்காக வெடித்தது. ரசிகர்கள் எல்லோரும் மணிமேகலைக்கு ஆதரவாக களமிறங்கினர். அதை வேளையில் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ் பாண்டேவை சரமாரியாக விமர்சித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிரியங்காவிற்கு ஆதரவாக பிரபலங்கள் களமிறங்கி இருப்பதும் ரசிகர்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் மணிமேகலை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சுயமரியாதை எதிர்பார்க்கும் மணிமேகலை எப்படி பிக் பாஸில் தாக்கு பிடிப்பார். அங்கு அவ்வளவு எளிதாக வெளியே விட முடியாது எனவும் கேள்விகள் எழுந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த என்ட்ரிக்காக தான் தன்னுடைய பி ஆர் மூலம் தன்னுடைய பெயரை வைரலில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it