எழிலுக்காக குடும்பத்தினர் செய்த ஆச்சரியம்... ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. ராஜியின் தந்திரம்..

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜிக்கு கதிர் பணம் கொடுக்க அதை வாங்க முடியாது என மறுத்து விடுகிறார். தன்னுடைய அப்பாவிடம் சண்டை போட வீட்டின் முன் கத்துகிறார். மீனா மற்றும் கதிர் அவரை தடுத்து கேட்காமல் பேசிக்கொண்டே இருக்கிறார். ராஜி அம்மா அப்பா, சித்தப்பா கோயில் சென்று இருப்பதாக கூறுகின்றனர். ராஜியும் கோயில் போக கதிர் அவரை பாலோ செய்கிறார்.

மீனா இந்த விஷயத்தை கோமதியிடம் சொல்கிறார். அச்சோ இன்னைக்கு பெரிய பிரச்னை இருக்கும் போலவே என பயப்படுகிறார். ராஜியை கோயிலில் சமாதானம் செய்யும் கதிர் என்ன செய்யனும் எனக் கேட்க என் செலவை நானே பார்த்துக்குவேன். அப்போதான் உன் கூட வருவேன் என்கிறார். சிறகடிக்க ஆசை தொடரில் ரோகினிக்கு சத்யா தான் பணத்தை திருடிவிட்ட விஷயம் தெரிகிறது. வீடியோவை எடுக்க சிட்டி கூறுகிறார். எல்லாரும் வீட்டுக்கு வர ஸ்ருதி அடிப்பட்டு இருப்பதை குறித்து விசாரிக்கிறார். ரோகிணி வீட்டினருக்கு குறி கேட்டேன். மீனாக்கு கெட்ட நேரம் வந்திருப்பதாக பொடி வைத்து பேசுகிறார்.

ரவி அவருடைய புது முதலாளியிடம் பேசுகிறார். காலையில் மீனாவுக்கு முத்து உதவி செய்கிறார். அதை ஸ்ருதி பாராட்டுகிறார்.பாக்கியலட்சுமி தொடரில் எழில் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு செழியன் வர எல்லாத்துக்கும் காசு பத்துச்சா எனக் கேட்க எழிலும் தன்னிடம் இருந்ததாக சொல்லிவிடுகிறார். பின்னர் டிவி வாங்கி வந்து இருக்கும் பிரச்னையில் படம் பார்ப்பதை விட்டுடாதே என்கிறார்.

பின்னர் அவரை பின்தொடர்ந்து கோபி வீட்டுக்கு வருகிறார். நிலா மற்றும் அமிர்தாவிடம் பேசுகிறார். எழிலிடம் காசை கொடுக்க அவர் வாங்க மறுக்கிறார். ஈஸ்வரி மற்றும் இனியா காலேஜ் செல்ல அவர்களை கோபி தன்னுடன் வருமாறு அழைக்கிறார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளாமல் ஆட்டோவில் ஏறி செல்கின்றனர். கோபி பின்தொடர்ந்து செல்ல ஈஸ்வரியை நிறுத்தி பேசுகிறார்.

Related Articles
Next Story
Share it