ஈஸ்வரிக்கு கொட்டு வைத்த ராதிகா… மீண்டும் பல்ப் வாங்கிய ரோகிணி… கடுப்பில் ராஜி!..

VijayTv: பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரியை வீட்டில் வந்து சந்திக்கிறார் ராதிகா. தன் அம்மா பேசியவற்றிற்கு மன்னிப்பு கேட்டு விட்டு ஊர் உலகம் பேசும் எனக்கூறி நீங்கள் எனக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கீங்க, இப்போ அந்த உலகம் உங்களை பத்தி பேசுது. இப்போ உங்களுக்கு அதோட வலி புரியும்னு நினைக்கிறேன்.

அவர் கிளம்பி சென்றுவிட ராதிகா நீங்க அத்தை கிட்ட பேசின முறை சரியில்லை என்கிறார். அவங்க எத்தனை நாள் ஊர் உலகத்துக்கு பயந்துதானே வாழ்ந்தாங்க. இப்போ அவங்களுக்கு வரும்போது அது புரியும்னு நினைக்கிறேன். யாருமே சொல்லல நான் உங்களுக்கு எப்படி அந்த தப்பு புரியும் என்கிறார். இதை தொடர்ந்து ஈஸ்வரி நான் இனிமேல் எங்கேயும் வரல என்னை எங்கேயும் கூப்பிடாத என கூறி விடுகிறார்.

கோபியை அவருடைய ரெஸ்டாரண்டில் சந்திக்கிறார் செழியன். சிறகடிக்க ஆசை தொடரில் ஸ்ருதி அம்மா, பார்வதி, டான்ஸ் வகுப்பு மாணவர்கள் என அனைவரும் வர பூஜையை தொடங்குகின்றனர். பின்னர் வித்யா வந்து கோலாட்டம் ஆட குச்சியை கொடுக்க வீட்டில் இருப்பவர்கள் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

மீனா வீடியோ எடுத்துக் கொண்டிருக்க அதை வாங்கிய வித்யா நைசாக சமையல் கட்டிற்கு சென்று விடுகிறார். பின்னாடியே வரும் ரோகிணி வீடியோவை தேட அப்போது அங்கு வரும் முத்து மற்றும் மீனா ரோகிணியை எடுத்து போன் கீழே விழுந்து உடைத்து விடுகிறது.

என்னுடைய போன் உடைந்துடேன் என முத்து வருத்தப்பட ரோகிணி முழு பிடுங்கி நிற்கிறார். கடைசி நாள் கொலுவிற்கு கிறிஸை அழைக்க அவர் இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு அவர் பாட்டி கடைக்கு போய் இருக்க முத்து மற்றும் மீனா காத்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்க அவருடைய அப்பா தான் ஆதார் கார்டை கொடுத்து விட்டதாக கூறுகிறார். இதனால் அவர் பயந்து எல்லோருக்கும் உண்மை தெரிந்து விட்டது என அலறிக் கொண்டிருக்கிறார்.

வீட்டிற்கு வரும் செந்தில் தங்கமயிலின் ஆதார் கார்டை எல்லோரிடமும் காட்டிக் கொண்டிருக்க அனைவரும் புகைப்படத்தை மட்டுமே பார்த்துக் கொள்கின்றனர். தங்கமயில் பயந்து தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். வீட்டிற்கு வந்தவர்களிடம் ஆதார் கார்டை பார்த்ததாக கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் வயது குறித்து எதையும் பார்க்காமல் புகைப்படத்தை மட்டுமே பார்த்து இருப்பதால் தங்கமயில் சற்று அமைதியாகிறார். அவருடைய அம்மா மாப்பிள்ளை வந்ததும் பதறாம கார்டை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள் என கூறிவிட்டு செல்கிறார்.

Related Articles
Next Story
Share it