ரோகிணியின் திட்டம்… ஈஸ்வரிக்காக சண்டைக்கு நிற்கும் பாக்கியா… முழிக்கும் தங்கமயில்!..

VijayTv: சிறகடிக்க ஆசை தொடரில் மீனா கொலுவிற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருக்கிறார்.. அப்பொழுது வரும் ரோகிணி விஜயாவிற்கு புடவை எடுத்துக் கொடுத்து அவரை ஐஸ் வைக்கிறார். அப்பாவிற்கு இல்லையா என கேட்க இது பெண்கள் சாமி கும்பிடும் விஷயம் என சமாளித்து விடுகின்றனர்.

பின்னர் மீனாவின் தோழிகள் கொலுவிற்கு வர அவரை விஜயா தரக்குறைவாக பேசுகிறார். இதைக் கேட்கும் மீனா விஜயாவிடம் கொழுக்கட்டையை கொடுத்து சும்மா இல்லாமல் சாப்பிடுங்க என சொல்லிவிட்டு செல்கிறார். ரோகிணி ஆன்லைனில் மேக்கப் வகுப்பு எடுக்க இருப்பதாக அதற்குரிய போர்டை விஜயாவிடம் கொடுத்து பிரிக்க சொல்கிறார்.

பாக்கியலட்சுமி தொடரில் ஈஸ்வரியை ஹோட்டல் இருக்கு அழைத்துச் செல்கிறார் பாக்கியா. அங்கிருக்கும் செப்பிடம் ஆர்டர் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். வேலை செய்யும் பெண்கள் ஈஸ்வரியை பார்த்து உடனே வெளியில் வந்துட்டாங்களே என பேசிக்கொள்கின்றனர். இதைக் கேட்கும் ஈஸ்வரி கடுப்பாகி வீட்டிற்கு சென்று விடுகிறார்.

வீட்டிற்கு வரும் பாக்கியா அவரை சமாதானம் செய்ய இனியா ராதிகா அம்மா பேசியவற்றை கூறுகிறார். இதனால் கடுப்பாகும் பாக்கியா வெளியில் சென்று புறணி பேசும் பெண்களிடம் என் அத்தையை பற்றி இனி நீங்க ஏன் பேசுறீங்க மரியாதை இருக்காது என திட்டிட்டு செல்கிறார். ராதிகாவை பார்த்து அவரிடம் உங்க அம்மாவை ஒழுங்கா இருக்க சொல்லுங்க என கூறிவிட்டு செல்கிறார். வீட்டிற்கு வரும் ராதிகா தன் அம்மாவை கண்டித்து வைக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்க மயிலிடம் ஆதார் கார்டை சரவணன் கேட்க அவர் காரணத்தை மாற்றி மாற்றி கூறி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இதை வீட்டில் உள்ளவர்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டில் இருப்பதாக கூற அவர்கள் அனைவரும் வெளியில் சென்றிருப்பதாக சமாளித்து சரவணனை அனுப்பி விடுகிறார்.

கோமதியிடம் ராஜி மற்றும் மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்க அவர்களும் இந்த ஆதார் கார்டு விஷயமாக தங்கமயில் பதட்டம் அடைவது குறித்து கிசு கிசுகித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வரும் தங்கமயிலிடம் இது குறித்து கேட்க அவர் சொல்ல முடியாமல் திணறுகிறார். ஒரு கட்டத்தில் கோமதி ஃபோட்டோ அசிங்கமா இருக்கும் தானே சமாளிக்கிற என கேட்கிறார். உடனே தங்கமயிலும் அதுதான் என சமாளித்து விடுகிறார்.

Related Articles
Next Story
Share it