Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
அரசி வீட்டிற்குள்ளே இருப்பதால் அவரை வெளியில் அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார் கோமதி. இருவரும் கிளம்பி வெளியில் வர எதிர் வீட்டில் அப்பத்தா வாசலில் அமர்ந்திருக்கிறார். அரசியை பார்த்துவிட்டு அவர் பேச வர அப்பொழுது அங்கு வரும் கோமதி அவரை திட்டிவிட்டு செல்கிறார்.
பின்னர் இருவரும் சேர்ந்து கடைக்கு செல்லும் போது வழியில் பார்க்கும் பெண்கள் அரசியிடம் மோசமாக கேள்விகளை முன்வைக்கின்றனர். அவர்களை கோமதி திட்டி விட்டு செல்ல இன்னும் சில பெண்கள் தெருவில் நிற்பதை பார்த்து இன்னைக்கு போக வேணாம் வீட்டிற்கு செல்லலாம் என அரசியை அழைத்துக் கொண்டு செல்கிறார்.
வீட்டிற்கு வரும் கோமதி வாசலில் இருக்கும் அப்பத்தாவை பார்த்து தப்பு செஞ்ச உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் நல்லா இருக்காங்க என ஜாடை பேசிவிட்டு வீட்டிற்குள் செல்கிறார். கோமதி கோபத்தில் உட்கார்ந்து இருக்க அப்பொழுது சுகன்யா காபி எடுத்து வருகிறார்.
அதை பார்க்கும் கோமதி, நான் இப்படி கஷ்டப்படறதுக்கு நீயும் தான் காரணம். என் பொண்ணோட வாழ்க்கையில விளையாடிய யாரும் நல்லாவே இருக்க மாட்டாங்க. அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கும் என திட்டி அனுப்புகிறார்.
பின்னர் பாண்டியன் வர வெளியில் நடந்ததை அவரிடம் சொல்கிறார் தங்கமயில். அரசியை அழைத்து சமாதானம் செய்யும் பாண்டியன் இனிமேல் அரசி குறித்து யாரும் பேசாத வண்ணம் தான் ஒன்று செய்ய இருப்பதாக சொல்லி செல்கிறார்.
வாசலில் சுகன்யா சோகமாக நிற்க அவரிடம் வந்து பேச்சு கொடுக்கிறார் தங்கமயில். தன்னுடைய வாழ்வில் நடந்த முதல் திருமணம் குறித்தும் டைவர்ஸ் குறித்தும் சுகன்யா வருத்தப்பட்டு தங்கமயிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தன்னுடைய அக்காவை பார்க்க செல்வதாக கூறி குமார் வீட்டிற்கு சென்று விடுகிறார்.
மருமகள்களுடன் கோமதி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அப்பொழுது வரும் பாண்டியன் அரசி எங்கே என கேட்கிறார். அவள் ரூமில் இருப்பதாக கூற அவளை அழைத்துக்கொண்டு வெளியில் செல்ல மைக் கட்டிய ஒரு ஆட்டோ வீட்டு வாசலில் இருக்கிறது.
இதை யார் நிறுத்தி இருக்கிறார்கள் என கோமதி கேட்டுக் கொண்டிருக்க பாண்டியன் பதில் சொல்வதற்குள் அவர் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார். பின்னர் ஆட்டோக்காரர் வந்து பாண்டியனை கை காட்ட ஏன் என்னிடம் சொல்லவில்லை என கோமதி கேட்க நீ எங்க பேச விட்ட என அவரை திட்டுகிறார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…