Categories: latest newstelevision

Pandian Stores: குமரவேலுவின் திட்டத்தால் மீண்டும் குழம்பும் அரசி… என்ன நடக்க போகுதோ?

Pandian Stores: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

எல்லாரும் புடவை எடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். எல்லாருக்குமே புடவை எடுத்தாச்சு என செந்தில் மற்றும் ராஜி கூற பின்னர் மாப்பிள்ளை குறித்தும் பேசுகின்றனர். அரசிக்கு செந்தில் அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

நடந்த எதையும் யோசிக்காத. உனக்கு எதோ கெட்ட நேரமும் என நினைச்சிக்கோ என்கிறார் செந்தில். அரசி அதுவா நியாபகம் வருது அண்ணே என்கிறார். பின்னர் எல்லாருமே தப்பு செய்யாத ஆளே இல்ல. நீ கவலைப்படாதே என ஆறுதல் சொல்லி அவரை தேற்றுகின்றனர்.

சந்தோஷமா இரு என செந்தில் கூற இருந்தாலும் பயமா இருப்பதாக அரசி கூறுகிறார். கதிர் மற்றும் செந்தில் இருவரும் மாற்றி மாற்றி சொல்லி அரசிக்கு ஆறுதல் சொல்லி தேற்றி விடுகின்றனர். வீட்டுக்கு வரும் அரசி புடவையை பாத்து கொண்டு இருக்கிறார்.

சதீஷுடன் பேசலாம் என நினைத்து கொண்டு இருக்க அப்போ சுகன்யா ரூமிற்குள் வருகிறார். என்னாச்சு எனக் கேட்க குமாரு என தொடங்கியதுமே அவரை அடக்குகிறார் அரசி. எனக்கு அவர பத்தி பேச எந்த விருப்பமும் இல்லை என்கிறார் அரசி.

சுகன்யா உடனே போட்டோவை காட்டி குமாருடன் என்ன இப்படி போட்டோ எடுத்திருக்க எனக் கேட்க, அரசி இதெல்லாம் நான் எடுக்காத போட்டோ என்கிறார். குமாருடன் பிரண்ட் வீட்டுக்கு போனதாக அங்கே இப்படி போட்டோ எடுத்தாக சுகன்யா சொல்ல அரசி நான் எந்த தப்பும் செய்யலை என்கிறார்.

எனக்கு உங்க கிட்ட இதை புரிய வைக்க விரும்பலை எனக் கூற குமார் எனக்கு தேவையில்லை. அவன் சும்மா விடமாட்டான் என்கிறார். சுகன்யா என் போனில் இருந்து பேசி இந்த பிரச்னையை முடிச்சிவிடு எனக் கூறி அரசியை வலுகட்டாயம் செய்து பேச வைக்கிறார்.

அந்த சமயத்தில் குமார் கால் செய்ய அரசியிடம் கொடுத்து பேச சொல்கிறார். அரசியிடம் குமார் என்னை விட்டு வேற ஒருத்தனை கல்யாணம் செஞ்சிப்பீயா எனக் கேட்கிறார். நீ என்னை விட்டு வேற ஒருத்தரை கட்டிக்கிட்டா இந்த போட்டோவை எல்லாருக்கும் அனுப்புவேன். ஊர் முழுசா போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன் என்கிறார்.

அரசி போனை வைத்து விட சுகன்யா தனக்கு எதுவும் தெரியாதது போல நடிக்கிறார். அரசி இதை வீட்டில் சொல்லலாம் என ஹாலுக்கு செல்கிறார். அங்கு பாண்டியன் இருக்க அவர் அரசியிடம் இந்த கல்யாணம் உனக்கு பிடிச்சு தானேமா பண்ற எனக் கேட்கிறார். அரசி கலங்கி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago