தமிழ் சீரியலில் வாய்ப்பு கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில் என்ற ரீதியில் பலர் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வரும் நிலையில், கதாநாயகி சோவில் கலந்துகொண்டு ரன்னர் அப்பாக வந்த ஷாலினி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸில் ராஜீயாக கலக்கி வருகிறார்.
சின்ன வயதிலிருந்து நடனத்தில் ஆர்வம் இருந்தவர் ஷாலினி. அவர் கல்லூரியில் படிக்கும் போது ஒரு நடன நிகழ்ச்சிக்காக நடன பள்ளியைத் தேட 24 ஸ்டுடியோஸ் என்ற நடன பள்ளியை கண்டுப்பிடித்தார். அதை நடத்தி வந்த பிரபுவுக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்கிறது. இதை தொடர்ந்து கல்லூரியின் மூன்றாம் வருடத்திலேயே இருவருக்கும் திருமணம் முடிகிறது.
இருவருக்குமே நடனம் என்றால் பிடிக்கும் என்பதால் தங்களுடைய கல்யாணத்தில் சில ஆல்பம் பாடல்களை உருவாக்குகின்றனர். அந்த பாடலின் வீடியோக்கள் பல மில்லியன் தாண்டி வைரலான நிலையில் இன்ஸ்டால் வீடியோ போடுவதை தம்பதி வழக்கமாக செய்து வந்திருக்கின்றனர். அப்பொழுது அவருக்கு கதாநாயகி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆடிஷன் வரக்கூடிய ஒரு வாய்ப்பு வருகிறது.
ஆனால் முதலில் ஷாலினி இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இருந்தும் கணவர் பிரபு உன்னால் எல்லாம் முடியும் எனக்கூறி அவருக்கு கஜினி படத்தில் அசினின் ஒரு காட்சியை எடுத்துக் கொடுத்து இதை பத்து தடவை பார்த்துவிட்டு உனக்கு என்ன வருகிறதோ அதை வீடியோவாக எடுத்து விடு எனக்கு கூறி சென்று இருக்கிறார்.
ஷாலினையும் கணவர் சொன்னதை அப்படியே செய்து வீடியோ அனுப்பி விட அவருக்கு விஜய் டிவியிலிருந்து ஆடிஷன் வரக்கூடிய அழைப்பு வருகிறது. அங்கு போனவருக்கு கூட்டத்தைப் பார்த்து முதலில் பயம் வந்து வீட்டுக்கு போய்விடலாம் என கணவரிடம் கூறியிருக்கிறார். இருந்தும் பிரபு இவரை சமாதானம் செய்து வாரணம் ஆயிரம் காட்சியை நடிக்க வைக்க அங்கும் செலக்ட் ஆகிறார் ஷாலினி.
பின்னர் கடைசி ஆடிஷனிலும் செலக்ட்டாகி ப்ரோமோ சூட்டிற்கு சென்றபோது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தவறுதலாக விழுந்து காலில் பெரிய அடிபட்டிருக்கிறது. அப்போதும் ஷாலினி இது வேண்டாம் எனக் கூற கணவர் பிரபு இதை செய்தே ஆகவேண்டும் என அவரை பிடித்து செய்ய வைத்திருக்கிறார்.
கோயமுத்தூரில் ஐடி வேலை பார்த்து வரும் ஷாலினி ஒவ்வொரு முறை ஷோக்கான தேதியில் சென்னை வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 10 மட்டுமே கொண்ட அந்த நிகழ்ச்சிக்கு கணவர், குடும்பம் என ஷாலினிக்கு பாதுகாப்பாக வந்துள்ளனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் ஷாலினி ரன்னராக 3 லட்சம் பரிசை வென்றார். தற்போது வேலையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது சீசனிலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…