Pandian stores2: கதிர் பேச்சால் தர்ம அடி வாங்க இருந்த செந்தில்… காப்பாற்றிய மீனா

Published on: August 8, 2025
---Advertisement---

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

செந்தில் பதட்டமாக இருப்பதை பார்க்கும் கதிர் என்ன விஷயம் எனக் கேட்க காசை பேங்கில் போடவில்லை. அரசு வேலைக்காக என்னுடைய மாமனாரிடம் காசை கொடுத்து இருக்கேன் எனக் கூறிவிடுகிறார். கதிர் அதிர்ச்சியாகி இதை அப்பாவிடம் சொன்னால் பிரச்னையாகும் என்கிறார்.

என்னிடம் சொல்லி இருக்கலாமே. உன் மாமனாரிடம் கேட்கலாமா எனக் கேட்க அவர் காசை கொடுத்துவிட்டதாக சொல்கிறார். உடனே கதிர் சண்டைக்காரன் காலில் விழுறதுதான் இப்போ வழி. நம்ம அத்தைக்கிட்டையே விஷயத்தை சொல்லுவோம் என்கிறார்.

ஒத்துப்பாங்களா எனக் கேட்க கோபமாக தான் இருப்பாங்க. ஆனா புரிஞ்சிப்பாங்க என்கிறார். செந்தில் கடையில் யாரும் இல்லாமல் எப்படி போவது என கேட்க, சரவணன் வரச்சொல்லி செந்தில் கால் செய்கிறார். அவரும் தன்னுடைய வேலையில் பர்மிஷன் போட்டுவிட்டு கிளம்பும்போது அங்கு தங்கமயில் வருகிறார்.

அவர் உடனே கிளம்பு எனக் கேட்க அல்வா சாப்பிடணும் போல இருக்கு என்கிறார். சரவணன் நீ போ நான் வாங்கிட்டு வரேன் எனக் கூற அவர் இப்பவே சாப்பிடணும் என்கிறார். சரி யாரிடமாவது வாங்கி அனுப்புகிறேன் எனக் கூற தங்கமயில் அத்தை பனியாரம் உடனே செஞ்சி தந்ததாக சொல்கிறார்.

சரி வா உடனே வாங்கி தரேன் எனக் கூறிவிடுகிறார். கதிர் மற்றும் செந்தில் இருவரும் சதீஷ் வீட்டிற்கு அவர்களை பார்க்க வருகின்றனர். ஆனால் அவர்கள் சென்னை சென்று விட்டதாக சொல்கின்றனர். கதிர் கால் செய்து உமையாளை கேட்க அவர் எதுக்கு எனக்கு நீ கால் செஞ்ச எனக் கத்திவிட்டு போனை கட் செய்கிறார்.

செந்திலுக்கு பாண்டியன் கால் செய்து எதுக்கு வெளியில் சுத்திட்டு இருக்க. பேங்கில் பணத்தை எடுத்துட்டியா எனக் கேட்க அவர் போகலை. இனிமே தான் போகணும் என்கிறார். உடனே போ நான் இனிமே அசிங்கப்பட விரும்பலை என்கிறார்.

சரவணன் கடைக்கு போகலையா எனக் கேட்க இல்ல என்கிறார் செந்தில். உடனே செந்தில் சரவணனுக்கு கால் செய்ய அவர் எடுக்காமல் இருக்கிறார். கதிர் தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்கலாம் எனக் கூறி செல்கிறார். அவர் நண்பரிடம் கடன் கேட்க செல்ல சூரிட்டி இல்லாமல் கடன் தரமாட்டாங்க என கதிர் நண்பர் சொல்லிவிடுகிறார்.

மீனா மற்றும் செந்தில் இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அத்தைக்கிட்ட பேசுனா எப்படி நடக்கும் என நினைச்சீங்க, அவங்க நேராக மாமாக்கு கால் செய்து உன்னால் கொடுக்க முடியலைனு மகன்களை வச்சி பேசுறீயா என சத்தம் போடுவாங்க என்கிறார்.

எந்த நம்பிக்கைல காசை கொடுத்தீங்க. அப்போ எங்க அப்பாக்கிட்டையே காசை கேட்டு இருக்கணும் என்கிறார் மீனா. நான் செஞ்சது தப்புதான். அதை எப்படி திருத்த போறேன் எனத் தெரியவில்லை என்கிறார் செந்தில். பாண்டியன் இனி செந்திலை என்ன செய்ய போகிறார்?

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment