Categories: latest newstelevision

Pandian Stores2: செந்தில் அரசு வேலைக்கு ஓவர் பில்டப் கொடுக்குறாங்களே? என்னமோ பிரச்னை இருக்குப்பா!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

குடும்பத்தினர் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க அரசிக்காக செந்தில் சாக்லேட் வாங்கி வந்து கொடுக்கிறார். நீ அப்பாக்கு சப்போர்ட் செய்ற அதனால உனக்கு கிடையாது எனக் கூற பின்னர் அரசி கலாய்த்து கொண்டு இருக்கிறார். அரசி சாக்லேட்டை வாங்கி பின்னர் எல்லாருக்கும் கொடுக்கிறார்.

கோமதி அரசி வேலை எப்படி போச்சு எனக் கேட்க மீனா அய்யோ எனக் கலாய்க்க தப்பான ஆளுக்கிட்ட கேட்டுட்டீங்க என்கிறார். கதிரும் ஆமா நானும் கேட்டு ரத்தம் வராத குறை என்கிறார். அவர்களை அடக்கும் கோமதி, ராஜி கேள்வி கேட்க செந்தில் அப்படி இருக்கும். இப்படி இருக்கும் என தொடர்ந்து கதை சொல்லி கொண்டு இருக்கிறார்.

மளிகை கடை வேலையெல்லாம் ஒரு வேலையா என கோமதி கடுப்பாக பார்க்கிறார். தொடர்ந்து பாண்டியன் கடையை நக்கலாக பேச செந்திலை அடித்துவிட்டு கோமதி அப்பாவை கலாய்க்கிறீயா? அந்த கடை தானா நமக்கு சோறு போட்டுச்சு என்கிறார்.

உன்கிட்ட வேலை எப்படி போச்சுனு தானே கேட்டேன். அப்பா கதையெல்லாம் கேட்டேனா எனக் கடுப்பாகிறார். மீனாவும் உண்மையை சொல்லுங்க. உருட்டு உருட்டுனு உருட்டாதீங்க என்கிறார். செந்திலும் அவங்க பாராடுனாங்க இவங்க சொன்னாங்க என கதையாக அவிழ்த்து விடுகிறார்.

மயில் ரூமில் சரவணனுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார். அவர் எதுவும் தனக்கு வாங்கி கொண்டு வருவார் எனக் காத்து இருக்கிறார். ஆனால் சரவணன் எதுவும் வாங்காமல் வர என்ன வாங்கிட்டு வரேனு சொன்னீங்க எனக் கேட்க நிறைய வேலை மறந்துட்டேன் என்கிறார்.

ராஜி மற்றும் கதிர் இருவரும் கோச்சிங் கிளாஸ் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாண்டியன் குறித்து கதிர் காமெடியாக சொல்ல ராஜியும் அதை கேட்டுக்கொண்டு இருக்கிறார். பின்னர் பாண்டியன் குறித்து பிரமிப்பாக பேசுகிறார் ராஜி.

ஆம்பள பசங்க அப்பா மாதிரியே இருப்பாங்க. பொம்பள பசங்க அம்மா மாதிரியே இருப்பாங்க என்கிறார் ராஜி. கதிர் ராஜியிடம் அப்போ உனக்கு பொம்பள பிள்ளை பிறந்த அதுவும் அரந்த வாலு போல தானே இருக்கும் எனக் கேட்க ஆமாம் இதுல என்ன சந்தேகம் என்கிறார்.

உடனே கதிர் அப்போ என்னை அந்த குழந்த எப்படி கூப்பிடும் எனக் கேட்க ராஜி அதிர்ச்சியாக அவரை பார்க்கிறார். ராஜி கடுப்பாகி உன்னை தாத்தா இல்ல லூசுக்கெட்ட கதிருனு கூப்பிடும் எனத் திட்டிவிட்டு படுக்கிறார். பின்னர் கதிருக்கே புரியா அவர் தன்னை திட்டிக்கொள்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

55 minutes ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

2 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

11 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

13 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

13 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

14 hours ago