Categories: latest newstelevision

Pandian Stores2: ஆத்தாடி ஒருவழியா அரசி-குமார் கதைக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு!…

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

கதிர், குழலி கோவமாக நின்று கொண்டிருக்க குமார் பைக்கில் வீட்டிற்கு வருகிறார். அவரிடம் சென்று இருவரும் சண்டை போட கோமதி, ராஜு உள்ளிட்டவர்களும் அங்கு வந்து இருவரையும் பிரித்து விட முயற்சி செய்கின்றனர்.

குழலி குமாரை பிடித்து திட்டிக்கொண்டு இருக்க அங்கு இருப்பவர்களுக்கு என்ன விஷயம் என தெரியாததால் அவரிடம் எதற்காக இந்த சண்டை என கேட்டுக் கொண்டிருக்கின்றனர். சக்திவேல் என் பையனையே எதுக்கு நீ கையை ஓங்குற என திட்டிக் கொண்டிருக்கிறார்.

கடுப்பான குழலி குமார் ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அவளை பைக்கில் வைத்து கட்டி பிடித்துக் கொண்டு ஊர் சுற்றிய கதையையும் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். இதில் கடுப்பான குடும்பத்தினர் குமாரை திட்ட அவர் நான் அப்படித்தான் செய்வேன் என பேசுகிறார்.

இதில் கடுப்பான கதிர் குமாரை அடிக்க பாய அவரை பிடித்து ராஜி அமைதிப்படுத்துகிறார். இதெல்லாம் ஒரு மூஞ்சா, இவளுக்காக நான் சும்மா இருக்கணுமா என குமார் ஓவராக பேச கதிர் கடுப்பாகி கல்லை எடுத்துக்கொண்டு வருகிறார்.

அவரை குடும்பத்தினர் பிடித்து கொள்கின்றனர். குமார் இடையில் வந்து கதிரை அடிக்க பாய அரசி உள்ளே வந்து எங்க அண்ணனை அடிக்கிற வேலை வச்சிக்காதீங்க. என்கிறார். இதில் கடுப்பான சக்திவேல் இவன் என் பையனை அடிச்சப்போ நீ என்ன செஞ்சிட்டு இருந்த என சத்தம் போடுகிறார்.

இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்க உள்ளே வரும் அரசி கதிரை அமைதிப்படுத்துகிறார். நீ இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் உன் வாழ்க்கையை எடுத்துக்க வேணாம். இதெல்லாம் ஒரு ஆளே இல்ல என்கிறார்.

ஒரு கட்டத்தில் இவன் என் புருஷனே இல்லை என அரசி கூற அவர் கோபத்தில் கூறுவதாக அப்பத்தா மற்றும் குமாரின் அம்மா அரசியை சமாதானம் படுத்த முயற்சி செய்கின்றனர். குமார் சந்தோசத்தில் நீ மனசுல வச்சிருந்ததை இப்பவே சொல்லு என அவரை ஏற்றி விடுகிறார்.

அரசி தன்னுடைய திருமணத்தில் நடந்த ரகசியத்தை மொத்த குடும்பத்தினருக்கு முன்பும் போட்டு உடைத்து விடுகிறார். யாருக்கும் எதுவும் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க அப்பத்தா அரசியை வீட்டிற்குள் அழைத்து செல்கிறார். குமார் குடும்பத்தினரும் உள்ளே செல்ல கோமதி குடும்பத்தினர் அதிர்ச்சியில் அங்கையே நிற்கின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago