Categories: latest newstelevision

Pandian Stores2: அரசியால் கடுப்பில் சுற்றும் குமரவேல்… குடிக்கு அடிமையான பாண்டியன்…

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

பாண்டியன் கடையில் எல்லாரும் வந்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். ஆனால் அவர் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்க அங்கு வரும் பழனி எல்லாரையும் திட்டி அனுப்பி விடுகிறார்.

வீட்டில் அரசி அமர்ந்து இருக்க ராஜி அம்மா, குமார் அம்மா என எல்லாரும் இதை எப்படி நீ செஞ்ச. கல்யாணம் ஏற்பாடு செஞ்சப்பவே உனக்கு தெரியும் தானே. அப்போவே வீட்டில் சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தாமல் இருந்து இருக்கலாம் தானே எனக் கேட்கின்றனர்.

ஆனால் அரசி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். அப்போது வரும் சுகன்யா எப்படி இந்த முடிவை எடுத்த எனக் கேட்கிறார். நேத்து வரை குமாரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என்று தானே என்கிட்ட சொல்லிட்டு இருந்த என்கிறார். அந்த நேரத்தில் குமார் வருகிறார்.

ஆமாம் சொல்லிட்டு இருந்தேன். ஆனால் இவர் பேசுனதுல என் மனசு மாறிட்டு என அரசி கூற நல்லா இருந்த பொண்ணு மனச கெடுத்து இருக்க எனத் திட்டுகின்றனர். அரசி எல்லாரும் என்னையே கேள்வி கேட்கிறாங்க. நீங்க பதில் பேசுங்க என குமாரை மாட்டி வைக்கிறார்.

ஒருகட்டத்தில் எல்லாரும் சென்று விட வீட்டினரிடம் சொல்லிவிட்டு சுகன்யா அரசியை குமார் ரூமிற்கு அழைத்து செல்கிறார். என்னிடம் கூட இந்த ஐடியாவில் நீங்க இருக்கீங்கனு சொல்லவே இல்லையே என அவர் சொல்ல ஒன்னும் சொல்லாமல் அவரையே பார்த்து கொண்டு இருக்கிறார் அரசி.

வீட்டிற்கு வரும் பாண்டியன் குடித்துவிட்டு வர மகன்கள் அவரை பிடித்து அழைத்து செல்ல அவர் முரண்டு பிடிக்கிறார். கோமதி செய்வது அறியாமல் இருக்க பின்னர் சாமியிடம் சென்று கையெடுத்து கும்பிட்டு அழுகிறார்.

ரூமிற்குள் சென்றதும் அரசியை பார்த்து கோபப்படுகிறார் குமார். உன்னை நான் காதலிக்கவே இல்லை. கல்யாணம் நமக்கு நடக்கவே இல்லை. ஒழுங்கா போய் எல்லாரிடமும் இந்த உண்மையை சொல்லு என குமார் கேட்க நான் ஏன் சொல்லணும்.

உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்க போய் சொல்லுங்க. ரெண்டு வீட்டுக்கு முன்னாடி பேச எந்த துப்பும் இல்லை. என்னிடம் பேச வந்துட்டீங்களா எனக் கேள்வி கேட்கிறார். குமார் அதிர்ச்சியாகி நிற்க அரசி கட்டிலை சரி செய்து கொண்டு இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் குமார் கடுப்பாகி அரசி கையை பிடித்து வெளியில் தள்ளப்பார்க்க அவர் கத்தியை எடுத்து குமார் கழுத்தில் வைக்கிறார். இதில் குமார் ஷாக்காகி நிற்க இந்த கை வைக்கிற வேலை வச்சிக்கிட்ட அறுத்து போட்ருவேன் என அரசி மிரட்டுகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

25 minutes ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

2 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

2 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

2 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

5 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

6 hours ago