Categories: latest newstelevision

Pandian Stores2: குமரவேலின் திட்டத்தினை காலி செய்த அரசி… ஆனா பாண்டியன் நிலைமை?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அரசியின் கல்யாணம் நடக்கவிடாமல் குமார் அவரை கடத்தி சென்று தற்போது வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார். அண்ணன்கள் எல்லாம் அவரை அடிக்க பாய அரசி எங்கே எனக் கேட்கின்றனர்.

அவர் காரில் இருப்பதாக கை காட்ட உள்ளே இருக்கும் அரசி குமரவேல் வெளியில் போய் என்ன சொல்ல போறேன். அதனால் வீட்டில் என்ன நடக்கும் என்பதை அவரிடம் சொல்லிக்கொண்டே வருகிறார். இதனால் பாண்டியன் தற்கொலை செய்து கொள்வார் என மிரட்டுகிறார்.

ஒருகட்டத்தில் தன் வாழ்க்கையை விட அப்பாவின் மரியாதையை காப்பாற்ற நினைத்த அரசி அங்கு இவரை மிரட்ட குமரவேல் வைத்திருந்த தாலியை தானாக கட்டிக்கொள்கிறார். அவர் உள்ளே இருந்து இறங்க எல்லாரும் அதிர்ச்சியாக பார்க்கின்றனர்.

என்ன நடந்தது எனக் கேட்க இவர் சொன்னது எல்லாமே உண்மை தான். ஆனால் அவர் ஒரு பக்க கதையை மட்டுமே சொல்லி இருக்கார். தன்னுடைய தாலியை வெளியில் எடுத்து போட குமரவேல் முதற்கொண்டு எல்லாரும் அதிர்ச்சியாகி விடுகின்றனர்.

என்னை பார்க்க வர சொன்னது இவர்தான். நான் இல்லாமல் வாழ முடியாது என குமரவேல் சொன்னதால் இந்த கல்யாணம் நடந்ததாக சொல்ல குமார் பதறி போய் பார்த்து கொண்டு இருக்கிறார். உமையாளிடம் என்னை மன்னிக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

அவர் இதற்கு உன்னை எப்படி மன்னிக்க முடியும். நீ செஞ்சது சின்ன விஷயமா என்கிறார். அரசி எல்லாரிடமும் பேச முயற்சி செய்ய கோமதி கோபத்தில் அடித்து விடுகிறார். மயிலின் அம்மா இந்த களவாணி குடும்பத்துல ஏன்மா கல்யாணம் செஞ்சிக்கிட்ட என்கிறார்.

இதில் கடுப்பான சக்திவேல் நீங்கதான் திருட்டு குடும்பம் என சத்தம் போட நாங்க என்ன திருடுனோம் எனக் கேட்க அன்னைக்கு கொள்ளையில் செஞ்சதை சொல்ல மயில் அப்பா தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க என்கிறார். எல்லாம் சரியாதான் இருக்கோம் என சக்திவேல் திட்டுகிறார்.

இதில் கடுப்பான மீனா சத்தம் போட அவரை அப்பா, அம்மா அடக்குகிறார். மயிலின் அம்மா இவ கூட பேசுறா. இந்த மயிலு ஏன் அமைதியா இருக்கா என்கிறார். உமையாள் உங்க குடும்பம் நல்லாவே இருக்காது என சாபம் விட்டு செல்கிறார்.

இதில் பாண்டியன் தடுமாறி போக பார்க்க அரசி அவர் காலை பிடித்துக்கொண்டு அழுதுக்கொண்டு இருக்கிறார். வீட்டினரும் அழுதுக்கொண்டே இருக்கின்றனர்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

8 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago