Categories: latest newstelevision

Pandian Stores2: அடுத்த பிரச்னையை பற்ற வைத்த சரவணன்… மயிலை துரத்தி இனி என்ன ஆகுமோ?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அரசியை மீனா மற்றும் ராஜி வீட்டுக்கு வரக்கூறி கெஞ்சிக்கொண்டு இருக்க நான் வர மாட்டேன். அந்த குமார் வீட்டில் தான் இருப்பேன் என்கிறார். சொன்னா கேளு அரசி. நீ வீட்டுக்கு வா நான் பேசுறேன் மாமாக்கிட்ட. என்ன பிரச்னை நடந்தாலும் பாத்துக்கலாம் என்கிறார் மீனா.

ஆனால் அரசி பிடிவாதமாக அவனை என்ன செய்ய போகிறேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் எதாவது செய்வேன். இந்த ஒரு விஷயத்தில் என்னை விட்ருங்க. நீங்க இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல கூடாது. எனக்கு நீங்க ரெண்டு பேரும் சத்தியம் பண்ணிக்கொடுங்க எனக் கேட்கிறார்.

மறுபக்கம் தங்கமயில் ரூமில் இருக்க அப்போவரும் சரவணனிடம் வேலைக்கு போகலையா என்கிறார். இல்ல லீவ் போட்ருக்கேன். அங்க போனா அரசி விஷயம் கேட்பாங்க என்கிறார். சரியென சொல்லி மயில் வேறு என்னவோ பேசிக்கொண்டே போக சரவணன் எழுந்து பேக்கை எடுத்து மயிலை டிரெஸ் பேக் செய்ய சொல்கிறார்.

எதற்கு எனக் கேட்க நீ செய் நான் வந்து சொல்கிறேன் எனக் கூறி செல்கிறார். அவரும் பேக் செய்துக்கொண்டே மாமா என்ன மன்னிச்சி என்னை புரிஞ்சிக்கிட்டாரு போல. இதுவே போதும் என அவரும் யோசிக்காமல் டிரெஸை எடுத்து வைத்து கொண்டு இருக்கிறார்.

சரவணன் கோமதியிடம் வந்து மயிலின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி அவருடன் மயில் தங்க ஆசைப்படுவதாக சொல்லி அழைத்து செல்ல அனுமதி கேட்கிறார். கோமதியும் உடனே அழைச்சிட்டு போ எனக் கூறி விடுகிறார்.

பைக்கில் மயில் சந்தோஷமாக செல்ல வழியில் தங்கள் வீட்டுக்கு செல்லும் வழியாக இருக்க யோசிக்க சரியாக அவர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி அவரை இறக்கி விடுகிறார். இனி எங்க வீட்டுக்கு வராதே என அதிர்ச்சி கொடுக்க மயில் கெஞ்சிக்கொண்டு இருக்கிறார்.

அன்னைக்கு காலேஜில் அரசி கல்யாணம் முடிந்து எடுப்பேன் என்ற முடிவை தான் இப்போது எடுத்திருப்பதாக கூறுகிறார். மயில் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்க்கும் அவர் அம்மா, அப்பா வந்து சரவணனை சொல்லி உள்ளே அழைத்து செல்கின்றனர்.

12 தான் படிச்சி இருக்கானு சொல்லி இருந்தா ஒரு பிரச்னையும் இல்ல. மயில் தங்கையிடம் நீயாது காலேஜ் போறீயா எனக் கேட்க அவர் ஆமாம் எனத் தலையாட்டுகிறார். நீயாவது ஏமாத்தாம கல்யாணம் பண்ணு எனக் கூறி மயில் இனி என் வீட்டுக்கு வரக்கூடாது என திட்டவட்டமாக சொல்லி செல்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

4 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

6 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

12 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

13 hours ago