Categories: latest newstelevision

Pandian Stores2: அரசிக்கு தொடரும் சிக்கல்… குமரவேலுவின் எண்ணம் நடக்குமா?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

காலையில் எழுந்து குடும்பத்தினர் வாசலில் நிற்க கோமதி அய்யோ அய்யோ என கத்திக்கொண்டு இருக்கிறார். கோமதி இனிமே இவ கல்யாணம் நடக்குமா என அழுதுக்கொண்டு இருக்க அந்த சத்தம் கேட்டு அரசி தூங்கி எழுந்து வருகிறார்.

வாசலில் வந்து பார்க்க அங்கு அரசி மற்றும் குமரவேல் இருக்கும் புகைப்படங்கள் போஸ்டர்களாக இருக்க குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். பாண்டியனும் நெஞ்சை பிடித்து நிற்கிறார். அப்போ அரசி வந்து நான் எதுவும் பண்ணலை என அழுதுக்கொண்டே சொல்லுகிறார்.

பாண்டியன் கத்த போக சரியாக அரசி தூக்கத்தில் இருந்து விழுத்து விடுகிறார். அப்போது தான் அது கனவு என்பதே தெரிகிறது. ஆனால் வாச்லைல் அப்பாவுடன் பழனி மற்றும் செந்தில் நின்று என்னவோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியாக வர வீட்டில் அலங்கார வேலை நடந்து வருகிறது.

அந்த நேரத்தில் மீனா வர செந்தில் அரசியை கலாய்த்து கொண்டு இருக்கிறார். அவர் ஒரு கட்டத்தில் அரசியை கவனித்து என்ன ஆச்சு பேய் பிடிச்ச மாதிரி இருக்க எனக் கேட்க குமரவேல் எதுவும் பிரச்னை செய்றானா எனக் கேட்க அரசி எதுவும் இல்லை என சமாளிக்கிறார்.

குழலி வீட்டிற்கு வந்துவிட அவர் மருமகள்களை கலாய்த்து கொண்டு இருக்கிறார். அப்போ கோமதி வந்து உட்காருகிறார். மீனாவை ஏன் இவங்களிடம் வாய் அடிக்க மாட்டிங்கிறீங்க எனக் கேட்க அண்ணியிடம் பேசி மாட்டிக்க முடியாது என்கிறார்.

குழலி என்னவென கேட்க அத்தைக்கு மருதாணி வைப்பது குறித்து பேசிக்கொண்டு இருப்பதாக சொல்கிறார். அந்த நேரத்தில் அரசிக்கு கால் வர குமரவேல் என்ன ஜாலியா இருக்க போல. என்கிட்ட இருக்க போட்டோவை வைத்து உன்னை என்ன வேண்டும் என்றாலும் செய்ய முடியும்.

உன்னை இன்னொருத்தனை கட்டிக்க விடமாட்டேன். குடும்பத்தை அசிங்கப்படுத்தாம விடமாட்டேன் என்கிறார். நான் நினைச்சா என்ன வேணும் என்றாலும் செய்வேன். இந்த கல்யாணத்தை நிறுத்துவேன் என்கிறார். ராஜி புடவையை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறார்.

அப்போ கதிருக்கும் மேட்சிங்காக டிரஸை எடுத்து வைக்கிறார். போட்டோ எடுத்து கொள்வது போல நினைத்து கொள்கிறார். அப்போ கதிர் வர ராஜி எடுத்து வைத்த சட்டையை எடுக்காமல் இன்னொரு சட்டையை எடுத்து செல்கிறார்.

பின்னர் எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருக்க கோமதி அங்கு நகையுடன் வருகிறார். என்ன நகையை கேட்கவே இல்லை எனக் கேட்க நீங்களே எடுத்துட்டு வருவீங்கனு தெரியும் என்கிறார். தங்கமயில் நகை என்றதும் பதறி விடுகிறார். ராஜிக்கு நகையை கொடுத்துவிட்டு செல்கிறார் கோமதி.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago