Categories: latest newstelevision

Pandian Stores2: அரசியின் கல்யாணத்தில் சதி செய்ய காத்திருக்கும் குமரவேல்… மருமகள்களின் அதிரடி!

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சுகன்யாவிற்கு குமரவேல் கால் செய்ய தன்னுடைய பிரண்ட் என சமாளித்து விடுகிறார். பின்னர் கல்யாண வீட்டில் ஆடல் பாடல் இருக்கணும் என உமையாள் கூறி ராஜியை டான்ஸ் ஆட சொல்கிறார். கோமதியும் கடைசி விசேஷம் எனக் கூற குழலியே இதையே சொல்லாத அம்மா எனக் கடுப்படிக்கிறார்.

பின்னர் ராஜி மற்றும் கதிர் இருவரும் மாரி பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர். அதையடுத்து செல்லம்மா பாடலுக்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் டான்ஸ் ஆட குடும்பத்தினர் சந்தோஷமாக சிரித்திக்கொண்டு இருக்கிறார். அரசி பயத்தில் இருக்கிறார்.

இதையடுத்து சரவணன் மற்றும் தங்கமயிலை டான்ஸ் ஆட அழைக்க அவர் முதலில் தயங்குகிறார். பின்னர் எல்லாரும் வலுக்கட்டாயமாக ஆட வைக்க இருவரும் ஜோடியாக சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தினர் கைத்தட்டுகின்றனர்.

அதையடுத்து பழனி டான்ஸ் ஆடுகிறார். அவருடன் குழலி சேர்ந்து டான்ஸ் ஆட சுகன்யா கடுப்புடன் நிற்கிறார். மாப்பிள்ளை, பொண்ணை டான்ஸ் ஆடச்சொல்ல அரசி கவலையில் நிற்கிறார். இருவரும் வற்புறுத்த அரசி மற்றும் சதீஷ் ஆடுகின்றனர்.

குமரவேல் கால் வர சுகன்யா எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார். எல்லாரும் சந்தோஷமா இருக்கீங்க போல. அரசியிடம் போனை கொடுங்க எனக் கேட்க சுகன்யா வேண்டாம் எனச் சொல்ல அதபத்தி எனக்கு கவலையே இல்ல.

நான் அவ முன்னாடி வந்து நிற்பேன். பேசுறதை எல்லார் முன்னாடியும் பேசிடுவேன் எனக் கூறுகிறார். அரசி ரூமில் வந்து அமர அப்போ சுகன்யா வந்து குமார் கால் செய்து இருப்பதாக சொல்கிறார். நீ ஒரே ஒரு தடவை அவனிடம் பேசு என சுகன்யா கேட்க அரசி தயங்குகிறார்.

குமரவேலுக்கு கால் செய்து அரசி பேச என்னை ஏன் சாகடிக்கிறா எனக் கேட்க நீ தான் அதை செய்ற. பண்றதையும் பண்ணிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க போயிட்ட என்கிறார். எங்க அப்பா, அம்மாவுக்காக இந்த கல்யாணம் நடக்கணும் என்கிறார் அரசி.

அதை நீ முதலையே யோசிச்சு இருக்கணும் என்கிறார். தப்புதான் மன்னிச்சிடு என அரசி கேட்க குமரவேல் நேரில வந்து மன்னிப்பு கேளு என்கிறார். அரசி இப்போ என்னால் அங்கு வர முடியாது எனக் கூறிவிடுகிறார். நீ நேரில் வரணும் இல்லையென்றால் அந்த போட்டோவை மாப்பிள்ளை வீட்டினருக்கு அனுப்பி விடுவேன் என்கிறார்.

சுகன்யாவிடம் குமரவேல் சொன்னதை சொல்ல அவரும் நேரில் போய் மன்னிப்பு கேட்டு விடு என்கிறார். அந்த போட்டோவை பொய் என எனக்கே நம்ப முடியலை. ஆனா உங்க அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துவிடும் எனக் கூற அரசி மன்னிப்பு கேட்கணும் தானே கேட்கிறேன் என்கிறார்.

சுகன்யா உதவியுடன் வெளியில் செல்ல வர இடையில் கோமதி நிற்க அவரிடம் சுகன்யா பொய்களை சொல்லி சமாளிக்கிறார். அதையடுத்து அவரும் அரசி கல்யாணம் குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago