Categories: latest newstelevision

சிங்கப்பெண்ணே: மித்ராவின் கண்ணில் மண்ணைத் தூவி ரூட்டை மாற்றிய ஆனந்தி… இனி நடப்பது என்ன?

சிங்கப்பெண்ணே தொடர் சன் டிவியில் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. ஆனந்திக்கு எத்தனையோ தடைகள் தொடர் முழுக்க வந்த வண்ணம் உள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் அவள் எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் கதை. ஒவ்வொரு எபிசோடிலும் ஆனந்தியைச் சுற்றியே கதை நகர்கிறது. அடுத்தடுத்த திருப்பங்களும் தொடரை விடாமல் பார்க்கும் ஆவலைத் தூண்டி வருகின்றன.

தன் கர்ப்பத்துக்குக் காரணமானவன் இந்தக் கம்பெனியில்தான் இருக்கணும். எப்படியும் கண்டுபிடிக்கறேன் என்ற வைராக்கியத்துடன் ஆனந்தி தேடி அலைகிறாள். அதற்கான ஒரு வீடியோ மகேஷிடம் இருப்பதை அறிந்து எப்படியாவது வாங்கி விட நினைக்கிறாள். அதற்கு மித்ரா இடையூறாக இருக்கிறாள். இனி இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்ப்போம்.

ஆனந்தி மகேஷை சந்தித்து விடக்கூடாது என்று கண்கொத்திப் பாம்பாக மித்ரா அவளை ஃபாலோ பண்ணுகிறாள். கருணாகரன் அறைக்கு வந்து அங்கேயே இருந்து ஆனந்தியைக் கண்காணிக்கிறாள். இதனால் ஆனந்தி செய்வதறியாது தவிக்கிறாள். இதற்கிடையில் அன்புவின் அம்மா ஆனந்தியைப் பார்க்க கம்பெனிக்கு வருகிறார். ஆனந்தியும் வேறு வழியில்லாமல் போய் பார்க்கிறாள். இது மித்ராவுக்குத் தெரிய வர ஆனந்தியைப் பார்க்க அனுமதிக்கிறாள்.

அதே நேரம் அவளையும் ஃபாலோ பண்ணுகிறாள். அன்புவின் அம்மா ஏதோ ஒரு கோவிலுக்கு பூஜை வைக்கணும். உனக்கும், எனக்கும் உடல்நிலை சரியில்லாதபோதே வேண்டி இருந்தேன். நாளைக்கு நீயும் வரணும். உன்னை அழைக்கத்தான் நான் நேரில் வந்தேன்னு சொல்லிடுறாங்க. அந்த நேரம் அன்பு வந்து ஆனந்தி எங்கே கூப்பிட்டாலும் வர மாட்டான்னு கோபத்தில் சொல்கிறான்.

ஆனால் ஆனந்தியிடம் அன்புவின் அம்மா நான் கூப்பிட்டால் என் மருமகள் வருவாள் என்று சொல்கிறார். அதற்கேற்ப ஆனந்தியும் வர சம்மதிக்கிறாள். அந்த நேரம் பார்த்து அன்புவும் சந்தோஷப்படுகிறான். அடுத்து மதிய உணவு இடைவேளை வருகிறது. எல்லாரும் சாப்பிடக் கிளம்புறாங்க. மித்ரா ஆனந்தியை வைத்த கண் வாங்காம பார்க்கிறாள்.

ஆனந்தியும் அதைப் பார்க்க, சௌந்தர்யாவிடம் விஷயத்தைச் சொல்கிறாள். நம்மளை மகேஷை சந்திக்க விடாதபடி மித்ரா இருக்கிறாள். அதனால் நீ போய்ட்டு வீடியோவைக் கேளுன்னு சொல்லி அனுப்புகிறாள். சௌந்தர்யாவும் சரின்னு சொல்லி கிளம்புகிறாள். ஆனந்தி சாப்பாட்டை எடுத்தபடி மித்ராவைப் பார்க்கிறாள். இனி நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago