Categories: latest newstelevision

Siragadikka Aasai: முத்து சொன்னதை நிரூபித்த அருண்… இதெல்லாம் ரொம்ப தப்புதான்!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

மனோஜ் வாயில் சூடத்தை போட்டதும் அவர் அலறிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுகிறார். இதனால் கடுப்பான விஜயா எதற்காக இப்போ அவன் வாயில் சூடத்தை போட்டீங்க என கேட்கிறார். உடனே அந்த சாமியார் இது போனாதான் அவரோட கெட்ட காலம் சரியாகும் என்கிறார்.

பின்னர் மனோஜை பேச கூற அவர் திக்கி திக்கி கொண்டிருக்கிறார். உடனே முத்து அவன் பேசணும் அவ்வளவுதானே எனக் கூறி முதுகில் ஓங்கி ஒரு அடி அடிக்க மனோஜ் பின்னர் நன்றாக பேசிவிடுகிறார். தொடர்ந்து விஜயா மனோஜிடம் நீ பேச முடியாமல் இருந்தபோது ரோகிணி உனக்காக சொன்னதெல்லாம் உண்மையா என்கிறார்.

இதனால் ரோகிணி அதிர்ச்சியில் மனோஜை பார்க்க மனோஜ் நான் சொன்னதை தான் ரோகிணி சொன்னதாக சொல்லிவிடுகிறார். பின்னர் மனோஜ் ரூமில் எதக்காக நான் சொன்னதை சொல்லாமல் நீ உனக்கு தோன்றியதை சொன்ன எனக் கேட்கிறார்.

ரோகிணி வேண்டும் என்றே தான் சொன்னேன். உன்னையும், என்னையும் பிரிக்க கூடாதுனு தான் சொன்னேன். கடவுளே நினைச்சாலும் நம்மை பிரிக்க முடியாது என்கிறார். மனோஜ் இதுக்கு நீ பொய் சொல்லாமயே இருக்கலாமே என்கிறார்.

அது நடந்து முடிஞ்சிட்டு பழசை மறந்துடலாம். நான் அப்படியே உன்னை லவ் செய்வதாக சொல்கிறார். ரோகிணி மனோஜை தொட பார்க்க அவர் விலகி தள்ளி போகிறார். நம்ம சேர்வதை அம்மா தான் முடிவு செய்யணும் என மனோஜ் சொல்ல ரோகிணி கோபமாகி விடுகிறார்.

முத்து காருக்கு வெளியில் நிற்க அந்த பக்கமாக அருண் செல்கிறார். இந்த சமயத்தில் ஒரு செயின் பறிப்பு சம்பவம் நடக்க அருண் வண்டியை திருப்பி கொண்டு வருவதற்குள் முத்து அந்த திருடனை விரட்டி பிடித்து அடிக்கிறார். இதில் அந்த திருடனின் கூட்டாளி ஓடி விடுகிறார்.

கிடைத்த கேப்பில் முத்துவிடம் தப்பிய திருடன் ஒரு வீட்டில் நுழைந்து அந்த பெண்ணை கத்தி வைத்து மிரட்ட அருண் தயங்கி கொண்டு இருக்கிறார். ஆனால் முத்து சாதூர்யமாக செயல்பட்டு அந்த திருடனை திசை திருப்பி அடித்து மடக்கி விடுகிறார்.

பின்னர் அருணும், முத்துவும் அடித்து அந்த திருடனை பிடித்து விடுகின்றனர். ரோகிணி மகேஷ் என பேசி திரும்பவும் மனோஜை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்கிறார். இதை மனோஜ் ஒட்டுக்கேட்டு விட்டு யார் கூட பேசுற எனக் கேட்க வித்யாவை பார்க்க போவதாக மாற்றி பேசுகிறார். இதனால் மனோஜ் கடுப்பாகிறார்.

அருணுக்கு புரோமோஷன் கிடைக்க இருப்பதாக தன் அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார். எதுக்காக இது எனக் கேட்க ஒரு திருட்டு கேஸை பிடித்தாக சொல்ல முத்து உதவி செஞ்ச விஷயத்தை சொல்லாமல் தவிர்த்து விடுகிறார்.

அருணின் அம்மா விஜயாவிடம் பேசிய விஷயத்தை சொல்ல அருண் கோபமடைகிறார். சீதாவிடமும் பின்னர் பேசும் அருண் தன் புரோமோஷன் விஷயத்தையும் திருட்டு கேஸை பிடித்த விஷயத்தையும் சொல்கிறார். ஆனால் முத்து செய்ததை சொல்லாமல் விடுகிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

14 hours ago