Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சி தொடரான சிறகடிக்க ஆசை தற்போது ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ரசிகர்களிடம் சில தொடர்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். அப்படி ரசிகர்களால் தேடி வந்து பார்க்கப்படும் தொடராக இருந்தது சிறகடிக்க ஆசை. இதில் ஹீரோவாக முத்து என்ற கேரக்டரும், ஹீரோயினாக மீனா என்ற கேரக்டரும் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது மொத்த சீரியலுமே வில்லியான ரோகிணியை நோக்கி தான் நகர்ந்து வருகிறது. அவர் தொடர்ந்து பித்தலாட்டங்களை செய்து வந்தாலும் சிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கிறது.
தொடர்ந்து அவரும் கணவர் மனோஜும் இணைந்து பல வேலைகள் செய்தாலும் பெரிய பிரச்சினைகளில் இதுவரை மாற்றவில்லை. இதனால் ரசிகர்கள் டைரக்டரை இந்த ரோகிணி தான் தற்போது ஹீரோயினா என கேட்கும் அளவுக்கு மாறி இருக்கிறது நிலைமை. இதே பிரச்சினையால் இந்த தொடர் தற்போது டிஆர்பிலும் பெரிய அடி வாங்கி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரோகிணிக்கு பிரச்சினை கொடுத்து வந்த பத்தாவது இடத்தில் இருந்த டிஆர்பி தற்போது தப்பி தத்தி நான்காம் இடம் வரை முன்னேறி இருக்கிறது. ஆனால் அதற்கும் தற்போது இயக்குனர் தானாகவே வேட்டுவைத்துக் கொள்ளும் விஷயம் ஒன்றை செய்து இருக்கிறார்.
மனோஜ் மற்றும் ரோகிணி வீடு வாங்க 30 லட்சம் பணம் கொடுத்த கதிரை பார்த்துவிட அவரை துரத்தி செல்கிறார் மனோஜ். அப்பொழுது ஏற்பட்ட விபத்தில் அவருடைய கண் பார்வை இழந்து விடுகிறார். இது குறித்து ரோகிணியிடம் அவர் வருத்தமாக இனி நான் யாருடைய உதவியது கேட்க வேண்டும் தானே எனக் கூறுகிறார்.
அதற்கு ரோகிணி நான் இருக்கிறேன் என தைரியம் கொடுக்கிறார் என்ற புரோமோ வெளியாகி இருக்கிறது. தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு கதை தேவைதானா? இருக்கும் பிரச்சினைகளை சரி செய்யாமல் புது கதையை இயக்குனர் மாற்றி இருப்பது சரி இல்லை.
தற்போது மனோஜிற்கு ஆதரவாக ரோகிணி இருப்பார். இதனால் அவருடைய உண்மை தெரிந்தாலும் கூட மனோஜ் அவரை விட்டு விலக மாட்டார். விஜயாவும் மகனை பார்த்துக்கொண்ட மருமகளை ஏற்றுக்கொள்ள தான் இந்த கதைக்களம் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…