Categories: latest newstelevision

விஜயாவின் தண்டனை… பழனியின் முடிவு… ஈஸ்வரியிடமே ஆக்ட்டிங் போடும் கோபி

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடர்களில் நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.

பாக்கியலட்சுமி

ராதிகாவை பார்க்க வரும் கோபி அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். எனக்கு அம்மாவும் முக்கியம். நீங்க ரெண்டு பேரும் முக்கியம் என ராதிகாவிடம் கூறுகிறார். ஒரு கட்டத்தில் முடிவெடுத்து நீங்க ரெண்டு பேரும் பாக்கியா வீட்டுக்கு என்னுடன் வாங்க என அழைக்கிறார்.

ஈஸ்வரி வாசலை பார்த்து காத்துக் கொண்டிருக்க அவரிடம் வாயடித்துக் கொண்டிருக்கிறார் பாக்கியா. அந்த நேரத்தில் அங்கு வரும் கோபி ராதிகா மற்றும் மயுவுடன் வர ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

ராதிகாவிடம் நெஞ்சு வலிப்பது போல இருப்பதாக கூறி அவரை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கிறார். ஈஸ்வரி இவளால உனக்கு மறுபடியும் உடம்பு சரியில்லாமல் போகும் என கூற மீண்டும் அதே போல் பேசி ஈஸ்வரியையும் சம்மாதிக்க வைத்து விடுகிறார்.

சிறகடிக்க ஆசை

காலையில் மனோஜ் வந்து கதவை தட்ட ரோகிணி திறக்காமல் இருக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் விஜயா வேகமாக கதவைத் தட்டி ரோகிணியை கதவை திறந்து வர அதற்கு திட்டுகிறார். கதவை மூடாமல் தயாராகி வரும்படி சொல்லி அனுப்புகிறார்.

மீனா சிட்டியிடம் ரோகிணி கடன் வாங்கிய விஷயங்களை முத்துவிடம் கூறிக் கொண்டிருக்கிறார். ரோகிணி தயாராகி வர எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ரோகிணி சாப்பிட அமர விஜயா அவரை எழுந்து செல்ல சொல்லி விடுகிறார். முத்து மற்றும் மீனா ஆதரவாக பேசியும் விஜயா கேட்காமல் இருக்கிறார்.

பின்னர், ரோகிணி பார்வதியை பார்த்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பார்வதி நான் விஜயாவிடம் பேசுவதாக அவருக்கு நம்பிக்கை தருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2

பழனிக்கு பெண் பார்த்து இருக்கும் விஷயத்தை செந்திலிடம் கூறுவது போல பாண்டியன் சக்திவேல் மற்றும் வெற்றிவேல் காதில் விழும்படி சொல்லுகிறார். இதைக் கேட்டவர்கள் கோபமாகி பழனியை வர சொல்லி நீ அந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க கூடாது என மிரட்டி கொண்டிருக்கின்றனர்.

அக்காவும் மாமாவும் தான் எனக்கு சின்ன வயசுல இருந்து நல்லத செஞ்சுகிட்டு இருக்காங்க. இப்ப என்னால அவங்களை விட்டு வர முடியாது என பழனி திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

பாண்டியன் சொத்தை பிரித்தால் உனக்கு கொடுக்க மாட்டான் என சக்திவேல் கூற அவர் எதுக்கு கொடுக்கணும் என்கிறார் பழனி.

இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வரும் பழனி கோமதியிடம் அண்ணன்கள் பேசிய விஷயங்களை கூறி இந்த குடும்பம் சேரும் நினைச்சேன். ஆனா பிரச்சினை தான் அதிகமாயிட்டு இருக்கு என சொல்லி வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தங்கமயில் ஸ்கூலில் பாடம் நடத்திக் கொண்டிருக்க கரஸ்பாண்டன்ட் வருவதைப் பார்த்து பதறி விடுகிறார். பின்னர் அவரைக் காண ராஜி மற்றும் மீனா வர பெண் பார்க்க போக உங்களுக்கு எதுவும் தேவையா என கேட்க வந்ததாக கூறி செல்கின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

2 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

2 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

10 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

11 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

12 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago