தர்ஷினி எங்கே.... கரிகாலன் சொன்ன விசயத்தால் ஷாக் ஆன குடும்பம்: எதிர்நீச்சல் ப்ரமோ
தர்ஷினி எங்கே.... கரிகாலன் சொன்ன விசயத்தால் ஷாக் ஆன குடும்பம்: எதிர் நீச்சல் ப்ரமோ
May 25, 2026, 14:33 IST
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக ரசிகர்களை கொண்டது எதிர் நீச்சல் தொடர்.
இந்த நிலையில் எதிர் நீச்சல் தொடரின் இன்றைய புரமோ வெளியானது. அதில், குணசேகரன் வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த ஈஸ்வரி இப்போது அப்படியே ஜனனிக்கு எதிராக மாறிவிட்டார். அதனால் ஜனனி வழக்கில் வெற்றி பெற தர்ஷினியை முழுவதுமாக நம்புகிறார். அவரும் ஜனனிக்கு நம்பிக்கை கொடுக்கிறார். வீட்டில் தர்ஷினி எங்கே சென்றார் என்று தேடுகின்றனர். ஆனால் தர்ஷினி எங்கே சென்றார் என்று தெரியவில்லை. அப்போது கரிகாலன் தர்ஷினி ஜனனி வீட்டிற்குதான் சென்றுள்ளார் என்று கூறுகிறார். இதனை கேட்ட குடும்பத்தினர் ஷாக் ஆகினறனர். ப்ரமோவை பார்க்கையில் இன்றைய எபிசோட் பரபரப்பாகவே இருக்கும் என்று தெரிகிறது.
