Pandian Stores2: குமாரை சாம்பாரால் குளிப்பாட்டிய அரசி… கடுப்பாகி கத்திய சக்திவேல்…

by AKHILAN |
Pandian Stores2: குமாரை சாம்பாரால் குளிப்பாட்டிய அரசி… கடுப்பாகி கத்திய சக்திவேல்…
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அரசி மொத்த சாம்பாரையும் குமார் தலையில் கொட்டி விட அவர் அலறிக்கொண்டு இருக்கிறார். இந்த சத்தத்தை கேட்டு சக்திவேல் மற்றும் குமார் அம்மா வர என்ன ஆச்சு எனக் கேட்டு கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் குமார் எதுவும் சொல்ல முடியாமல் முழி பிதுங்கி கொண்டு இருக்க அரசி இவர் தான் தன்னை கொட்ட சொன்னதாக சொல்கிறார். இருவரும் ரொமான்ஸ் செய்ததாக நினைத்து கொள்ள அவரை திட்டி விட்டு செல்கிறார் சக்திவேல்.

குமார் அம்மா நான் கிளீன் செய்யவா எனக் கேட்க அரசி வேண்டாம் நானே சுத்தம் செய்கிறேன் எனக் கூறி அவரை அனுப்பிவிட்டு குமார் பாத்ரூம் கதவை தட்டி இனிமே எங்க அப்பா அண்னனை அசிங்கப்படுத்த நினைச்சா உங்களுக்கு இதான் கதி என்கிறார்.

குமார் திட்ட பார்க்க டப்பென பாத்ரூம் கதவை அடைத்து விட்டு செல்கிறார் அரசி. பின்னர் சக்திவேல் மற்றும் முத்துவேல் நிலம் வாங்க காசை அடுக்கி கொண்டு இருக்கின்றனர். 40 லட்சத்துக்கு மேல் இருப்பதாக சொல்கிறார் சக்திவேல்.

அந்த நேரத்தில் சுகன்யா வர அவர் இவ்வளவு பணமா என ஆச்சரியமாக பார்க்கிறார். இது நிலம் வாங்க வைத்திருப்பதாக சொல்ல ஏன் அக்கவுண்ட்டில் போட வேண்டியது தானே என்கிறார். ஆனால் சக்திவேல் இது அந்த கணக்கில் வராத காசு என்கிறார்.

பின்னர் வீட்டில் கோமதி ராஜியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். உனக்கு எப்போ ரிசல்ட் வருது எனக் கேட்க ராஜி அதை ஏன் கேட்குறீங்க என்கிறார். சொல்லுடி எனக் கூற எதோ எழுதி இருக்கேன் என்கிறார். ரிசல்ட் நல்லப்படியா வரணும்.

அரசிக்கும் அன்னைக்கு தானே வரும் என்கிறார். அவளை பத்தி எனக்கு என்ன கவலை என்கிறார் கோமதி. பின்னர் ராஜி மற்றும் கதிர் பாண்டியன் கடைக்கு செல்ல ரிசல்ட் குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

பின்னர் பாண்டியன் கடையில் ராஜியை இறக்கிவிட்டு கதிரும் உள்ளே வருகிறார். பாண்டியன் எதுக்கும்மா நீ கடைக்கு வந்து இருக்க என்கிறார். அவர் நீங்க தான் சரியா பேசுறதே இல்லை எனக் கூற பாண்டியன் அமைதியாக இருக்கிறார்.

Next Story