Siragadikka Aasai: விஜயாவை நாக்கை பிடுங்குவது போல கேட்டாங்களே மீனா… தேவைதான்…

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி நடித்து கொண்டு இருக்க மனோஜ் ஒட்டுக்கேட்கிறார். நீ சொல்லு கோயம்புத்தூர் வந்தா உன்னை வந்து நேரில் சந்திக்கிறேன் என்கிறார். வெளியில் வரும் மனோஜ் யாருக்கூட பேசிக்கிட்டு இருக்க. அவங்களை நீ ஏன் போய் பார்க்கணும் எனக் கடுப்படித்து விட்டு செல்கிறார். மகேஸ்வரியை போய் மகேஷ்னு நினைச்சிட்டான். இப்படியே ஓட்ட வேண்டியது தான் என நினைத்து கொள்கிறார்.
வீட்டிற்கு வரும் ஸ்ருதியின் அம்மா மாப்பிள்ளையும், ஸ்ருதியும் ரெஸ்டாரெண்ட் திறக்க போகிறார்கள். அதற்காக பணம் கொடுக்க வந்ததாக சொல்கிறார். ரவியிடம் அப்பாவிடம் சொல்லாமல் நீயா என்ன முடிவு எடுத்து இருக்க எனக் கேட்கிறார்.
நான் பேசிக்கிட்டு தான் இருந்தேன். ஸ்ருதி தான் இப்படி பண்ணியதாக சொல்கிறார். அந்த நீத்து ரெஸ்டாரெண்டில் இவனோட சாப்பாட்டுக்கு தான் ஆள் வராங்க. ஆனா அது அந்த நீத்துக்கு தெரியலை என்கிறார். அதான் இந்த முடிவு எடுத்ததாக சொல்கிறார்.
ஸ்ருதியின் அம்மா 10 லட்சம் செக்கை கொடுத்து இந்தாங்க நீங்க தான் எங்க வாரிசு. இப்போ இது அட்வான்ஸுக்கு வச்சிக்கோங்க. இடம் பார்த்து ஓகே செய்ததும் மிச்சத்தையும் தருகிறேன் என அண்ணாமலையிடம் நீட்ட அவர் ரவியிடம் கொடுக்க சொல்கிறார்.
முதலில் ரவி தயங்க விஜயா மல்லுக்கட்டி வாங்க வைக்கிறார். அவர் சென்றதும் சம்மந்தினா இப்படி இருக்கணும். ஒன்னு பூக்கடை இன்னொன்னு சாக்கடை என கலாய்க்கிறார். இதில் கடுப்பான மீனா எங்க வீட்டை பத்தி பேசாதீங்க. காசு இல்லாம இருக்கலாம். ஆனா மனசு இருக்கு.
வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பாடு கொடுக்காம அனுப்ப மாட்டோம். ஆனா நீங்க வீட்டுக்கு வந்த யாருக்காவது சாப்பாடு போட்டு அனுப்பி இருக்கீங்களா என்கிறார். அண்ணாமலை விஜயாவை திட்டி அனுப்பி வைக்கிறார்.
பின்னர் சீதாவின் காதல் கதை குறித்து சொல்ல அவர்கள் நல்ல வரனா தானே இருக்கு. அண்ணனுக்கு முன் கோவம் தானே நீ தான் பொறுமையா சொல்லி புரிய வைக்கணும். கல்யாணம் முடிந்த பின்னர் எல்லாம் சரியாகும் என்கிறார்.
மீனாவும் என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறார். செல்வம் மற்றும் நண்பர்களுடன் ஷெட்டில் முத்து பேசிக்கொண்டு இருக்கிறார்.