Siragadikka Aasai: விஜயாவை திருடியாக்கிய ரோகிணி… செயினும் போச்சு… காசும் போச்சு!

by AKHILAN |
Siragadikka Aasai: விஜயாவை திருடியாக்கிய ரோகிணி… செயினும் போச்சு… காசும் போச்சு!
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

சிந்தாமணி வீட்டில் டான்ஸ் ஆடி சந்தோஷமாக விஜயா ஆட்டம் போட்டு கொண்டு இருக்கிறார். அப்போ இன்னும் சிலர் வர அவரை விஜயாவிற்கு அறிமுகம் செய்து வைக்க சிந்தாமணி அழைக்கிறார். விஜயா வர இருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

அப்போ அந்த புது பெண்மணி விஜயா கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து இந்த செயின் எனக் கேட்க என்னுடைய மருமக வாங்கி கொடுத்தது. அவ பெரிய பணக்காரி என்கிறார். ஆனால் அந்த பெண்ணோ இது என்னுடைய செயின் போல தான் இருக்கு என்கிறார்.

ஆனால் விஜயா அதெல்லாம் இல்ல. என் மருமகள் எனக்காக வாங்கிட்டு வந்தது. அந்த புது பெண்ணோ, இதில் ஒரு கல் விழுந்து இருக்கும். பின்னாடி என் கணவரின் இன்சியலான சிடி என்பதும் இருக்கும். இதை கழுத்தில் இருந்து திருடிட்டாங்க. நாங்க போலீஸ் புகார் கொடுத்து இருக்கோம் என்கிறார்.

விஜயா அதிர்ச்சியாகி அதெல்லாம் இல்ல இது என் நகை என்கிறார். உடனே சிந்தாமணி எதுக்கு பின்னாடி செயினை திருப்பி பார்த்தா தெரிஞ்சிட போகுது என்கிறார். விஜயா செயினை அவிழ்த்து திருப்பி பார்க்க அதில் அந்த இன்சியல் இருக்க அந்த பெண்மணி அதை பிடிங்கி கொள்கிறார்.

உங்க மருமக தான் திருடியா இல்ல உங்க குடும்பமே திருடியா என்கிறார். எல்லாரும் விஜயாவை தப்பாக பேச அவர் கோபமாக அங்கிருந்து சென்று விடுகிறார். பின்னாடி வந்த சிந்தாமணி என்னை கிளாஸுக்கு வர வேண்டாம்னு பேசுனல உனக்கு வேண்டும் என்கிறார்.

வீட்டில் விஜயா கோபமாக உட்கார்ந்து இருக்க அப்போ வரும் ரோகிணி அவருக்கு ஒரு புடவை பரிசாக கொடுக்கிறார். அதை கோபத்துடன் பிரிக்கும் விஜயா இதை எங்க வாங்குன இல்ல திருடிட்டு வந்தியா என்கிறார். ரோகிணி அதிர்ச்சியுடன் இல்ல ஆன்லைனில் உங்களுக்காக வாங்குனேன் என்கிறார்.

நீ தான் திருடி பழக்கிருக்கியே. உன்னை பொய் சொல்றவள் தான் நினைச்சேன். ஆனா இப்போ தான் உன் திருட்டு புத்தியும் தெரிஞ்சிது என்கிறார் எனக் கூறி ரோகிணியை புடவையாலே அடிக்க எல்லாரும் அதிர்ச்சியாகி விட முத்து அப்பா எனக் கத்தி அண்ணாமலையை அழைத்து விடுகிறார்.

எதுக்கு அடிக்கிற எனக் கேட்க இவளால் நான் இன்னைக்கு ஜெயிலுக்கு போய் இருப்பேன். அந்த நகை ஒரு திருட்டு நகையாம். சம்மந்தப்பட்டவங்க இன்னைக்கு அதை பார்த்து பெரிய பிரச்னையாகிவிட்டது. நல்லவேளை அவங்க என்னை விட்டுட்டாங்க எனக் கூற ரோகிணியும் ஷாக்காகி விடுகிறார்.

திருட்டு நகையை என்கிட்ட வித்து இருக்க என சிட்டியை நினைத்து கோபமாகி விடுகிறார். உன்னை அடிச்சதுக்கு என்னை பழி வாங்க பண்ணி இருக்க எனக் கேட்க அவரோ இல்ல ஆண்ட்டி நிஜமாவே காசு கொடுத்து தான் வாங்கினேன் என்கிறார்.

யாரிடம் வாங்குனா வா போய் வாங்கிட்டு வந்துரலாம் என மனோஜ் அழைக்க நானே போய்ட்டு வரேன் என்கிறார். ஆண்ட்டி அந்த நகையை கொடுங்க எனக் கேட்க அதான் அந்த பொண்ணு வாங்கிட்டே அவங்க நகைனு சொல்லி என்கிறார். ரோகிணி வாங்கினவங்களிடம் நகை கொடுத்தால் தானே காசு கொடுப்பாங்க என்கிறார்.

உடனே முத்து பார்லர் அம்மா உன்னை ஏமாத்த நினைச்சவங்க. நகை கொடுத்தா காசை கொடுத்துடுவாங்களா என்கிறார். ரோகிணி அதிர்ச்சியாக நிற்க அதை எவ்வளோக்கு வாங்குன என்கிறார் ஒரு லட்சம். அந்த நகை 2 லட்சம் என்கிறார்.

முத்து புருஷன் பொண்டாட்டிக்கு ஏமாறுரதே வழக்கமா இருக்கு என்கிறார். அண்ணாமலை சரி நடந்தது நடந்துட்டு மறந்துட்டு போங்க என்கிறார். ஆனால் விஜயா என்னை அசிங்கப்படுத்துன அதனால் ஒரு லட்சம் எனக்கு நீ கொடுக்கணும் எனச் சொல்லி செல்கிறார்.

Next Story