Siragadikka Aasai: சீதாவின் கல்யாணத்துக்கு விஜயாவிடம் உதவி கேட்ட அருண் அம்மா… இதெல்லாம் நடக்குமா?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
நீ சொல்லாமலா உங்க அம்மா என்னிடம் வந்து பேசுனாங்க எனக் கேட்க நான் எதுக்கு சொல்லணும். நான் எதுவுமே சொல்லலை என்கிறார். முத்து கோபமாக கத்த உங்களுக்கு பிடிச்சா செய்யுங்க. இல்ல விடுங்க என்கிறார்.
மேலும், சீதா அருணை தான் கல்யாணம் செஞ்சிப்பேன். இல்லனா எனக்கு கல்யாணமே வேண்டாம் எனக் கூறுவதாக சொல்லுகிறார். இதுவே எங்க அப்பாவா இருந்தா சீதாக்கு பிடிச்ச பையனையே கட்டி வைக்க ஓகே சொல்லிடுவார் என்கிறார்.
அவன் நல்லவன் இல்லை. மாமா இருந்தாலும் இதையே சொல்லி இருப்பார். நீ வேணா ஆவிக்கிட்ட பேசுற ஆளை வச்சு கேட்டு பாரு என்கிறார். எனக்கு தெரியாது. தெரிஞ்ச அக்கா போய் இருக்காங்க. அவங்களிடம் சொல்லி நான் அந்த ஆளை வரச்சொல்லுகிறேன் என்கிறார்.
மறுபக்கம் விஜயா டான்ஸ் கிளாஸில் இருக்கிறார். அந்த நேரத்தில் அருண் அம்மா விஜயாவை பார்க்க வருகிறார். அருணும், சீதாவும் காதலிக்கிறாங்க. ஆனா உங்க பையன் அவங்க இரண்டு பேருக்கும் நடந்ததை வச்சு பிரச்னை செய்றாரு.
நீங்க தான் உங்க பையனிடம் பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைக்கணும் எனக் கேட்கிறார். அதற்கு விஜயா, போயும் போயும் இந்த பூ கட்டுறவ வீட்டு பொண்ணுதான் உங்களுக்கு கிடைச்சிதா? உங்க பையனுக்கு இரண்டாம் கல்யாணமா அதனால் தான் இவளை கட்டி வைக்க நினைக்கிறீங்களா என்கிறார்.
உங்க பையனை சமாதானப்படுத்தி வேற பெண்ணை கட்டி வையுங்க என்கிறார். அருணின் அம்மா உங்க பையனை சமாதானம் செய்ய உங்களிடம் பேச வந்தது தப்புதான் எனக் கோபமாக திட்டி விட்டு செல்கிறார்.
மறுநாள் காலையில் சாமியார் ஒருவர் வர மீனா தான் ஆவியிடம் பேச ஆள் அனுப்பி இருப்பதாக நினைத்து முத்து உள்ளே அழைத்து செல்கிறார். வீட்டில் இருப்பவர்கள் கேட்க ஆவியுடன் பேச வந்திருப்பதாக முன்னவே முத்து சொல்லி அமைதிப்படுத்துகிறார்.
உடனே அந்த சாமியாரிடம் ஆவியை வரச்சொல்லுங்க. நான் உடனே பேசணும் என்கிறார். ஆனால் அந்த சாமியோரோ எனக்கே நீங்க பேசுறது பயமா இருக்கு என ஓட பார்க்க அவரை இழுத்து பிடித்து உட்கார வைக்கிறார். அப்போ பார்வதி, விஜயா வர வந்த சாமியார் இவர்கள் வர சொன்ன ஆள் என்பது குடும்பத்துக்கு தெரிகிறது.
மனோஜ் வாய் கட்டை பிரிப்பதாக சொல்லி அதற்காக வரச் சொன்னதாக விஜயா சொல்கிறார். அந்த சாமியார் உட்கார்ந்து மனோஜின் கட்டை பிரிக்க சொல்கிறார். பிரித்து விட்டு அம்மா சொல்ல சொல்ல மனோஜ் தடுமாறுகிறார். பின்னர் அம்மா சொல்ல சரியாக சாமியார் அவர் வாயில் சூடத்தை எறிய விஜயா பதறி விடுகிறார்.