Siragadikka aasai: தன் வாழ்க்கைதான் முக்கியம்… ரோகிணிக்கு டோஸ் விட்ட வித்யா!

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி காசு கிடைக்கும் என நேராக வித்யாவை பார்க்க செல்கிறார். ஆனால் வீட்டிற்குள் விடாமல் வித்யா ரோகிணியை வாசலிலே நிறுத்தி யாரை கேட்டு முருகனிடம் நீ காசு கேட்ட என்கிறார். என் மாமியாருக்கு வாங்குனது திருட்டு நகை என்பதால் இப்போ என்னிடம் 1 லட்சம் கேட்குறாங்க.
அதான் உனக்கு போன் பண்ணேன். நீ எடுக்கலை. அதான் முருகனுக்கு கூப்பிட்டு கேட்டேன் என்கிறார். வித்யா அன்னைக்கு மட்டும் எனக்கு போன் கிடைச்சிது. இந்த முறை கிடைக்கலையா எனக் கேட்க நிஜமா பண்ணேன். இருந்தாலும் நீ அவரிடம் தானே வாங்கி கொடுப்ப என்கிறார்.
நான் கட்டிக்க போறவரிடம் காசு எப்படி நீ கேட்கலாம் என வித்யா பேச ரோகிணி நீ என்ன இப்படிலாம் பேசுற. நீ என் பிரண்டுனு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு என்கிறார். நீ குடும்பத்தையே ஏமாத்துற. நீ என்னை நினைச்சு வெக்கப்படுறீயா என்கிறார். இனிமே வெக்கப்படாத.
உங்க அம்மா, பிள்ளையையே யோசிக்காம இருக்க. என்னைய பத்தியா யோசிக்க போற என்கிறார். உடனே ரோகிணியும் திட்ட இனிமே நமக்குள்ள எதுவும் இல்லை என்கின்றனர். நானும் அதான் சொல்றேன். இனிமே என்னோட பேசாதே என ரோகிணி கூற சரி முருகனிடம் வாங்குன காசை கொடுக்காம விட்ராதே என்கிறார்.
முத்து மற்றும் மீனா இருவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க ஸ்ருதி உள்ளே வருகிறார். பின்னர் மீனாவிடம் சீதா கல்யாண விஷயம் குறித்து கேட்க மீனாவும் நக்கலாக முத்துவுக்கு நடந்ததை சொல்கிறார். இதில் கடுப்பாகும் முத்து என்ன இப்படி பேசிட்டு இருக்க எனக் கேட்கிறார்.
நான் சீதாக்கு பிடிச்ச மாப்பிள்ளையை அழைச்சிட்டு வருவேன் என சொல்லிவிட்டு செல்கிறார் முத்து. ரூமில் ரோகிணி அழுதுக்கொண்டு இருக்க மனோஜ் வர எதுக்காக அழுகுற எனக் கேட்க ரோகிணி உங்க அம்மாவுக்கு கிப்ட் கொடுப்ப போய் இப்போ நான் தான் பிரச்னையில் சிக்கி இருக்கேன் என்கிறார்.
மனோஜிடம் நீ எனக்கு உதவியே செய்றது இல்ல எனக் கேட்க என்ன உதவி செய்யணும் என்கிறார். ஒரு லட்சம் காசு தருவியா. நான் அடுத்த மாசம் தரேன் எனக் கேட்க அதில் பிரச்னை இல்ல. ஆனா கணக்கு வழக்கை அப்பா தான் பாக்குறாரு. அவரு கேட்டு அம்மாக்கு தெரிஞ்சா 2 லட்சம் கேட்பாங்க என்கிறார்.
மனோஜ் நீ ஏன் உதவியை ரவி மற்றும் ஸ்ருதியிடம் கேட்க கூடாது என்கிறார். இதில் கடுப்பாகும் ரோகிணி நீ செய்ய மாட்ட அவங்களிடம் கேட்க சொல்லுற. எனக்கு இப்போ அதான் வழி என்கிறார். ஸ்ருதியை பார்த்து ரோகிணி ஆன்ட்டியை சமாதானப்படுத்த ஒரு லட்சம் கடன் வாங்கி தான் வாங்கினேன் இப்போ அதில் ஏமாந்துவிட்டேன். அந்த கடனை ஆன்ட்டிக்கு கொடுக்குற காசு என 2 லட்சம் கடன் தேவைப்படுவதாக சொல்கிறார்.
நீங்க எதுக்கு ஆன்ட்டிக்கு கொடுக்கணும் எனக் கேட்க ரோகிணி நான் மனோஜ் கூட வாழணும். அதுக்காக இதை செஞ்சிதான் ஆகணும் என்கிறார். ஸ்ருதி சரி அது உங்க விருப்பம். ஆனா இப்போ என்னிடம் காசு இல்லை. ரெஸ்டாரெண்ட்டில் போட்டுவிட்டேன் என்கிறார். ரோகிணி இதுவே நீங்க மீனாவுக்கு செஞ்சு இருப்பீங்களே என்கிறார்.
இதில் கடுப்பாகும் ஸ்ருதி மீனா உங்கள மாதிரி பொய் சொல்லி இருக்க மாட்டாங்க. அப்படி சொல்லி இருந்தாலும் அவங்களை சமாதானப்படுத்த நகை வாங்கி இருக்க மாட்டாங்க. அதும் இல்லாம காசை கொடுக்க ஒத்து இருக்கவும் மாட்டாங்க. முத்துவும் விட்ருக்க மாட்டாரு என்கிறார். மேலும் இந்த விஷயத்தில் மனோஜ் தான் உங்களை காப்பாத்தணும் எனக் கூறிவிடுகிறார்.