Siragadikka Aasai: இங்கையும் இரண்டாம் கல்யாணமா? நீத்துவால் கடுப்பான விஜயா…

by AKHILAN |
Siragadikka Aasai: இங்கையும் இரண்டாம் கல்யாணமா? நீத்துவால் கடுப்பான விஜயா…
X

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

விஷம் குடித்த பெண்ணின் அண்ணன் வர அவர் அம்மா அவரை பிடித்து திட்டுகிறார். அவ மனசுக்கு பிடிச்ச பையனை கட்டி வச்சிருந்தா இந்த பிரச்னை வந்து இருக்குமா? உங்க பிடிவாதத்துக்கு என்ன ஆகிருக்கு பாரு என சத்தம் போடுகிறார்.

அப்போ முத்துவிடம் வந்து அவசரத்துக்கு வந்து என் பெண்ணை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி தம்பி. இவங்களிடம் சொல்லுங்க பிடிச்ச பொண்ணை கட்டி வச்சா தானே என் பொண்ணும் சந்தோஷமா இருப்பா. நீங்களும் சொல்லுங்க தம்பி என்கிறார்.

முத்து அமைதியாக இருக்க அருகில் இருக்கும் மீனா சொல்லுங்க. பிடிச்ச பையனை கட்டிக்கிட்டா தானே வாழ்க்கை நல்லா இருக்கும் சொல்லுங்க எனக் கூற அவங்க குடும்ப விஷயத்தில் நம்ம தலையிடக் கூடாது எனக் கூறிவிடுகிறார். சீதாவிடம் கவனமா இருக்க சொல்ல அவர் கவலைப்படாதீங்க மாமா நான் இப்படி செய்ய மாட்டேன் என்கிறார்.

பார்வதியை அழைத்துக்கொண்டு விஜயா நீத்து ரெஸ்டாரெண்டுக்கு வருகிறார். ரவியை பார்க்க வந்ததாக சொல்ல அவர் ஒரு ஆர்டர் விஷயத்தில் இருப்பதாக சொல்ல சரியென கூறுகிறார் விஜயா. நைசாக கல்யாண விஷயம் பேச ஆரம்பிக்கிறார். எனக்கு தெரிஞ்ச பையன் இருக்கான்.

நிறைய படிச்சி இருக்கான். பிசினஸ் செய்வதாக சொல்லி உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும் எனக் கேட்கிறார். அதற்கு நீத்து எனக்கு மாப்பிள்ளை அமைதியாக இருக்கணும். நல்லா படிச்சி இருக்கணும். கோபப்பட கூடாது. அறிவாளியா இருக்கணும்.

மொத்தத்தில் உங்க பையன் ரவி மாதிரி இருக்கணும் எனக் கூறி அந்த நேரத்தில் போன் வர பேசிவிட்டு வருவதாக சொல்கிறார். பார்வதி நீ ஒரு ஐடியாவில் இருக்க ஆனா இவ சொல்றத பார்த்தா வித்தியாசமா இருக்கு ஸ்ருதியை பார்த்துக்க சொல்லு என்கிறார்.

வீட்டிற்கு வரும் விஜயா ஸ்ருதியை அழைச்சு ரவியை இனி ரெஸ்டாரெண்டுக்கு போக வேண்டாம் எனக் கூறச்சொல்ல அவரும் நீங்களே சொல்லுங்க என்கிறார். ரவியை அழைச்சு சொல்லிவிடுகிறார் விஜயா. ரூமில் ஸ்ருதி மற்றும் ரவி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இனி ரெஸ்டாரெண்டு போகாதே என்கிறார்.

Next Story