
ZEE5 தளத்தில் இன்று (பிப்ரவரி 27, 2026) வெளியாகியுள்ள சமுத்திரக்கனியின் முதல் வெப் சீரிஸ் ‘தடயம்’. இந்தத் தொடர் குறித்த விமர்சனம் இதோ…
கதைக் கரு
1999-ம் ஆண்டு தமிழகம் – ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் நடக்கும் மர்மமான கொலைகளைத் துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டர் அதியமானாக (சமுத்திரக்கனி) கதையின் நாயகன் வருகிறார். பல கொலைகள் நடந்தும், அதில் கொலையாளி விட்டுச் செல்லும் தடயங்கள் (திருமண சின்னங்கள் திருடப்படுவது) குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அவருடன் இன்ஸ்பெக்டர் லட்சுமியாக (ஷிவதா) இணைகிறார். இந்தத் தொடர் மர்மத்தின் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதைத் திரைக்கதையாகக் கொண்டுள்ளது.
சமுத்திரக்கனியின் நடிப்பு:
வழக்கமான உபதேச வசனங்கள் இல்லாமல், ஒரு முதிர்ச்சியான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி மிக இயல்பாக நடித்துள்ளார். அவரது உடல்மொழி மற்றும் அமைதியான பார்வை கதாபாத்திரத்திற்குப் பலம் சேர்க்கிறது. 1999-ம் ஆண்டின் பின்னணியை ( போன், அந்த காலத்து போலீஸ் வாகனங்கள்) உருவாக்குவதில் கலை இயக்குனர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இயக்கம் நவீன்குமார் பழனிவேல். முதல் படத்திலேயே வெற்றியை பெற்றுள்ளார்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
வழக்கமாக் வெப்சீரிஸ்கள் மிக நீண்ட எபிசோடுகளை கொண்டிருக்கும். ஆனால் இப்படம் நீண்ட எபிசோடுகள் இல்லாமல், சுருக்கமான காட்சிகளுடன் நகர்வது தொடரை சலிப்பின்றிப் பார்க்க வைக்கிறது. கொலைகளுக்கான காரணம் சொல்லப்படும் விதம் சற்று பலவீனமாக உள்ளது. மேலும் வில்லனை படத்தின் இடையிலேயே காட்டிவிடுதால் சுவாரஸ்யம் சற்றே குறைகிறது.
தடயம் சமுத்திரக்கனி மற்றும் ஷிவதாவின் நடிப்பிற்காக ஒருமுறை தாராளமாகப் பார்க்கலாம். விறுவிறுப்பான த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வு, ஆனால் திரைக்கதையில் இன்னும் அதிக திருப்பங்களை எதிர்பார்த்தவர்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தைத் தரலாம்.
ரேட்டிங்: 3.5/5
