அஜித் எனக்காக ஆட்டோ ஓட்டினார்!.. வாழ்க்கை ஸ்டார்ட் ஆச்சி!.. ஃபீல் பண்ணி பேசும் தாடி பாலாஜி!…

சினிமாவில் சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தாடி பாலாஜி. குறிப்பாக 90களில் விஜய் நடித்த பல படங்களில் அவரின் நண்பர்களில் ஒருவராக வருவார். வாலி உள்ளிட்ட பல அஜித் படங்களிலும் நடித்திருக்கிறார். விவேக், வடிவேலு ஆகியோருடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார்.
விஜய் நடித்த தமிழன், சச்சின், சுறா உள்ளிட்ட பல படங்களிலும் தாடி பாலாஜி நடித்திருக்கிறார். சினிமாவில் நடித்தாலும் இவரை மக்களிடம் கொண்டு பேய் சேர்த்தது விஜய் டிவிதான். அந்த சேனலில் ஒளிபரப்பான கலக்கப்போவது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜளில் ஒருவராக இருந்தார்.
சொந்த வாழ்வில் தனது மனைவி நித்யாவுடன் பல பிரச்சனைகள் ஏற்பட்டு பரபரப்பை உண்டாக்கியவர் இவர். தினமும் குடித்துவிட்டு என்னை சித்ரவதை செய்கிறார் என அவரின் மனைவி நித்யா பரபரப்பு புகார்களை கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு கமல் பல அறிவுரைகளையும் சொன்னார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மனைவியோடு சென்று கமலையும் பார்த்தார். ஆனால், மீண்டும் மனைவியுடன் பிரச்சனை செய்து அவரை விட்டு பிரிந்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் அதில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தில் பாலாஜிக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. விஜயை பார்த்து பேசும் அனுமதி கூட அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.
தலைவர் விஜயை சந்திக்கவே முடியவில்லை. கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் செய்யும் எந்த விஷயத்தையும் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் சொல்வதே இல்லை. யாரும் வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கிறார் என பரபரப்பான புகார்களை சொன்னார் பாலாஜி. இந்நிலையில், அஜித்தால் தன்னுடைய வாழ்க்கை மாறியது பற்றி பேசியிருக்கிறார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் தீனா படத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த காட்சியில் நான் ஆட்டோ ஓட்ட வேண்டும். ஆனால், எனக்கு ஆட்டோ ஓட்ட தெரியாது. இதை அந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் சொன்னதும் அவர் கோபப்பட்டார். அப்போது அங்கு வந்த அஜித் ‘என்ன பிரச்சனை?’ என கேட்டார். என்ன திட்டப்போகிறாரோ என பயத்தில் நின்று கொண்டிருந்தேன். ‘சரி இவர் கையை மாட்டும் காட்டுங்க. நான் ஆட்டோ ஓட்டுறேன்’ என அவர்தான் அந்த காட்சியில் ஆட்டோ ஓட்டினார். அன்று அவர் துவங்கி வைத்துதான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது’ என பேசினார் தாடி பாலாஜி.