ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்க ரஜினி அவரின் 173வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சுந்தர்.சி சொன்ன கதையில் ரஜினிக்கு திருப்தி ஏற்படாததால் அந்த படத்திலிருந்து சுந்தர்.சி விலகினார். எனவே, சிபி சக்ரவர்த்தி, அஸ்வத் மாரிமுத்து, ஆர்.ஜே. பாலாஜி, ராம்குமார் பாலகிருஷ்ணன் போன்ற இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டார் ரஜினி. இறுதியில் சிபி சக்ரவர்த்தியே இயக்குனர் என ரஜினி முடிவு செய்தார்.
அதன்பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒரே ஒரு படத்தை இயக்கியுள்ள சிபிக்கு ரஜினி எப்படி படம் கொடுத்தார் என கோலிவுட்டே ஆச்சர்யமாக பார்த்தது. இதை ஒரு மேடையிலேயே சொன்ன சிபி ‘இவனா ரஜினி படத்தை இயக்கப்போகிறான் என பலரும் பார்க்கிறார்கள். தலைவர் ரசிகனாக சொல்கிறேன்.. இந்த படம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்’ என சொன்னார்.
இந்நிலையில்தான், இந்த படத்தின் வேலைகள் தற்போது துவங்கியிருக்கிறது. படத்தின் முழுக்கதையையும் சிபி சக்ரவர்த்தி எழுதி முடித்துவிட்டார். முழுக்கதையையும் அவர் ராஜ்கமல் மகேந்திரன் கொடுப்பது உள்ளிட்ட சில புகைப்படங்கலை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பகிர்ந்து ‘ஆரம்பிக்கலாமா’ என பதிவிட்டிருக்கிறது.
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…