அஜித்தை தொடக் கூடாதா? ‘வீரம்’ படத்தில் தம்பி ராமையாவுக்கு ஏற்பட்ட அனுபவம்

by Rohini |   ( Updated:2025-04-26 09:58:39  )
veeram_ajith
X

veeram_ajith

Veeram Ajith: தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். அவருடைய நடிப்பில் குட் பேட் அக்லி படம் ரிலீஸாகி பெரிய ப்ளாக் பஸ்டர் படமாக மாறியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இந்தப் படம் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்பது போல் படத்தை மாற்றி விட்டார் ஆதிக் ரவிச்சந்திரன்.

அஜித்தும் இறங்கி இந்தப் படத்திற்காக நடித்திருப்பார். நேற்று கூட சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் மேட்ச் காண்பதற்காக அஜித் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார். சமீபகாலமாக அஜித்திடம் ஒரு நல்ல மாற்றம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுவரை எந்தவொரு பொது இடத்திற்கும் வராதவர், அவருடைய புகைப்படங்களை வெளியிடாதவர் என்று இருந்த அஜித் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதை எல்லாம் தளர்த்தி வருகிறார்.

இது எல்லாவற்றிற்கும் ஷாலினி ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றி நடிகர் தம்பி ராமையா சில விஷயங்களை பகிர்ந்தார். வீரம் படத்தின் மூலமாகத்தான் அஜித்துடன் முதன் முதலில் இணைகிறார் தம்பி ராமையா. அப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக லக்னோ சென்றிருந்தார்களாம். அதுவரை விஜயின் பல படங்களுக்கு நகைச்சுவை எழுதிக் கொண்டிருந்தாராம் தம்பி ராமையா.

இவர்தான் நடிக்க போகிறார் என்று சொன்னதும் அதற்குள் அஜித் தம்பி ராமையா பற்றியும் அவருடைய குடும்பத்தை பற்றியும் தெரிந்து வைத்துக் கொண்டாராம். ஷூட்டிங் போனதும் தம்பி ராமையாவை பார்த்ததும் எப்படி இருக்கீங்க? வீட்ல எப்படி இருக்காங்க? பாப்பா, தம்பி எல்லாரும் நலமா என்று விசாரித்தாராம். அதுவரை அடுத்த தலைமுறைகள் எல்லாம் கொஞ்சம் விலகித்தான் இருப்பார்கள் என்று நினைத்திருந்த தம்பி ராமையாவுக்கு அஜித்தி இந்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வீரம் படத்தில் ஒரு காட்சியில் அஜித்தை பார்த்ததும் தம்பி ராமையா ‘உன்னைய எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே’ என சொல்லி மார்ப பிடிச்சு தட்டுவார், அஜித்தின் இரண்டு கைகளையும் பிடித்து தட்டுவார். இது சிறுத்தை சிவா சொல்லாமல் தம்பி ராமையாவா செய்த செயல். இவர் இப்படி பண்ணியதும் சிறுத்தை சிவா ‘அண்ணே’ என்று கூப்பிட்டிருக்கிறார்.

உடனே தம்பி ராமையா ‘என்ன தம்பி தொடக் கூடாதா’ என்று கேட்டிருக்கிறார். உடனே அஜித் ‘சிவா. இது நல்லா இருக்கு.சார் பண்ணுவது போலவே இருக்கட்டும்’ என சொன்னாராம். இதை பற்றி தம்பி ராமையா கூறும் போது நான் ஒரு குணச்சித்திர நடிகர், எனக்கு இருக்கிற மரியாதை இதை எல்லாம் வைத்து அஜித் இப்படி சொன்னது பிரமிப்பாக இருந்தது. அதனால்தான் தொடர்ந்து வேதாளம், விஸ்வாசம் என அவருடன் டிராவல் செய்ய காரணமாக இருந்தது என கூறினார்.

Next Story