More
Categories: Cinema History Cinema News latest news

பாண்டியராஜனின் செயலால் படத்தை விட்டு விலகிய நடிகை… வீட்டுக்கே போய் மன்னிப்பு கேட்ட இயக்குனர்.!..

தமிழ் சினிமாவில் எப்போதும் நகைச்சுவை இயக்குனர்களுக்கென்று தனியாக ஒரு இடம் உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த இடத்தை ஏதாவது ஒரு இயக்குனர் நிரப்பி விடுவதுண்டு.

அப்படியாக ஒரு சமயத்தில் நகைச்சுவை திரைப்படங்களுக்காக பிரபலமான இயக்குனராக இருந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். அவருக்கு பிறகு அந்த இடத்தை பிடித்தவர் அவரது சிஷ்யரான இயக்குனர் பாண்டியராஜன். பாண்டியராஜன் இயக்கி தமிழில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் ஆண்பாவம்.

Advertising
Advertising

ஆண்பாவம் திரைப்படம் இயக்குனர் பாண்டியராஜனுக்கு கதாநாயகனாக முதல் திரைப்படம் ஆகும். அந்த படத்தில் நடித்த நடிகை சீதாவுக்கும் ஆண்பாவம்தான் முதல் திரைப்படம். அப்போது நடிகை சீதாவிற்கு நடிப்பின் மீது அவ்வளவாக ஆர்வமே இல்லை ஆனால் வீட்டில் வற்புறுத்திய காரணத்தினால் அவர் நடிப்பதற்கு வந்தார். ஆண்பாவம் படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியை மட்டும் சரியாக செய்யாமல் இருந்தார் நடிகை சீதா.

ஒரு காட்சியில் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை வடிகட்டுவது போன்ற காட்சி ஒன்று வரும். அந்த காட்சியை செய்வதற்கு ஒரு செப்பு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீரை நிரப்பி சீதாவை தூக்க சொன்னார்கள். ஆனால் சீதா அவரது வீட்டிலேயே தண்ணீர் குடங்களை தூக்கி பழக்கம் இல்லாதவர் என்பதால் அவருக்கு அது கடினமான வேலையாக இருந்தது.

பாண்டியராஜனுக்கு வந்த சங்கடம்:

இதனால் அந்த காட்சியை மட்டும் திரும்பத் திரும்ப படம் பிடித்தும் அதை சரியாக செய்யவில்லை சீதா. ஒரு ஐந்து முறை ரீடேக் சென்ற பிறகு பாண்டியராஜனுக்கு மிகவும் கோபம் ஆகிவிட்டது உடனே அவர் சீதாவின் கையில் அடித்து ”ஒழுங்காக இந்த காட்சியை நடிக்க மாட்டாயா? மிகவும் எளிதான ஒரு காட்சிதான் இது”  எனக்கூறியுள்ளார். இதனால் சீதா அழுதுவிட்டார்.

ஏனெனில் அவரது வீட்டில் கூட யாரும் அவரை சத்தம் போட்டு பேசியதில்லை, ஆனால் பாண்டியராஜன் அவரை திட்டிவிட்டார் என்பதால் அவருக்கு நடிக்கவே பிடிக்காமல் போய்விட்டது எனவே வீட்டிற்கு சென்ற சீதா பிறகு படப்பிடிப்புக்கு வரவில்லை.

இதனால் கவலையான பாண்டியராஜன் சீதாவின் வீட்டிற்கு சென்று ”தெரியாமல் செய்துவிட்டேன் சார் அவர்களை படப்பிடிப்பிற்கு அனுப்பி வையுங்கள் என அவர் அப்பாவிடம் கேட்டுள்ளார்”. அதற்கு சீதாவின் பெற்றோர் ”அவளை செல்லமாக வளர்த்து விட்டோம் சார் அதனால் பயந்து கொண்டு வந்து விட்டாள். நாங்கள் அனுப்பி வைக்கிறோம் எனக் கூறியுள்ளனர்”.

இதையும் படிங்க: நம்பியாருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்பரைஸ்!.. அட அது சூப்பர் ஹிட் படமாச்சே!…

Published by
Rajkumar

Recent Posts