Connect with us
vadi

Cinema News

வடிவேலுவுக்கு எமனா வந்ததே அந்தப் படம்தான்! எல்லாரோட சாபத்தையும் வாங்குறாரு

சமீப காலமாக வடிவேலுவை பற்றிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆரம்ப காலங்களில் ஒரு துணை நடிகராக இருந்த வடிவேலுவை அனைவரும் பாராட்டத்தக்க வகையில் மாற்றியதில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்தையே அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கு நேருக்கு நேராக நின்றார் வடிவேலு.

வடிவேலு மீது ஏன் இவ்ளோ கோபம்

அதுவே அவர் மீது மிகப்பெரிய கோபத்தை அனைவருக்கும் வரவழைத்த முதல் சம்பவமாக அமைந்தது. சின்ன கவுண்டர் படத்தின் மூலம் விஜயகாந்த் உடன் இணைந்த வடிவேலுவுக்கு அந்த நேரத்தில் வேட்டி சட்டைகள் எல்லாம் வாங்கிக் கொடுப்பாராம் விஜயகாந்த். ஆனால் அவரையே இந்த அளவுக்கு விமர்சித்ததில் அனைவரின் கோபத்திற்கும் ஆளானார்.

vadi1

vadi1

அது மட்டும் இல்லாமல் வடிவேலு நல்ல ஒரு பீக்கில் இருந்த நேரத்தில் அவருக்கு என்று சில குரூப் நடிகர்கள் இருப்பார்கள். அதில் முக்கியமானவர்கள் சிங்கமுத்து போண்டாமணி வெங்கல் ராவ் உட்பட சில நடிகர்கள் வடிவேலு உடனே பயணம் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர்கள் எல்லோரும் வடிவேலுவை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

அதற்குக் காரணம் வடிவேலுவின் சமீப கால நடவடிக்கை தான். கூட நடிக்கும் சக நடிகர்களை மரியாதை குறைவாக நடத்துவது, வருமானம் இல்லாத நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் கைவிட்டு விடுவது என பல கஷ்டங்களை வடிவேலுவால் அந்த நடிகர்கள் எல்லாம் அனுபவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அவருடன் நடித்த மற்றும் ஒரு நடிகரான பாவா லட்சுமணன் சமீபத்தில் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி கூறியிருக்கிறார்.

வடிவேலுவுடன் நடித்த சக நடிகர்கள் அவரிடம் வாய்ப்பு கேட்க போனால் அலுவலகத்திற்கு உள்ளேயே விட மாட்டாராம் வடிவேலு. மேலும் படப்பிடிப்பில் வாய்க்கு வந்தபடி திட்டியும் விடுவாராம். கொரோனா காலத்தில் வடிவேலு குரூப்பாக இருந்தாலும் விவேக் முன்வந்து வடிவேலு உடன் நடித்த சக நடிகர்களுக்கு உதவினார் .ஆனால் வடிவேலு கண்டு கொள்ளவே இல்லை என்றும் கூறினார்.

vadi2

vadi2

நண்பன் சாவுக்கு கூட போகல

மேலும் நண்பன் சாவுக்கு கூட வடிவேலு போகவில்லை என்றும் கூறினார். நாய் சேகர் படத்திற்காக வாய்ப்பு கேட்டு போனதாகவும் பார்த்து சொல்கிறேன் என்று வடிவேலு சொன்னதாகவும் ஆனால் அந்த படத்தில் என்னை அவர் கூப்பிடவே இல்லை என்றும் பாவா லட்சுமணன் கூறினார். அதுமட்டுமில்லாமல் காசு இல்லாத போது கூட எனக்கு சுகர் மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தவர் மயில்சாமி. அதேபோல கொரோனா காலத்தில் விவேக், மனோபாலா இவர்கள் அனைவரும் உதவினார்கள். ஆனால் வடிவேலு எந்த ஒரு உதவியும் இதுவரை செய்யவில்லை என்று கூறி இனிமேல் என் வாழ்க்கையில் அவர் பக்கமே திரும்பிப் பார்க்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க :என்ன மீறி நடிக்கிறியா நீ!.. சக நடிகரை ஓங்கி அறைந்த வடிவேலு…

மேலும் நாய் சேகர் பட சமயத்தில் வடிவேலு ஒரு பேட்டி கொடுத்து இருந்தாராம் .அந்த பேட்டியில் பழைய நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டி விட்டேன் என்று வடிவேலு சொன்னதாகவும் இப்போது புதிய நடிகர்களை வைத்திருக்கிறேன் என்றும் கூறினாராம் .அதுதான் அனைவருக்கும் ஒரு ஏமாற்றத்தை தந்திருக்கிறது. இதைப்பற்றி கூறிய பாவா லட்சுமணன் “நாங்கள் எல்லோரும் இருக்கும்போது நாங்க ஒன்னு சொல்லுவோம் அதை வடிவேலு ஏற்றுக்கொள்வார் .ஆனால் இப்ப இருக்கிற பசங்க எதிர்த்து பேச மாட்டாங்க .மேலும் அவங்க வாங்குற சம்பளத்தை கூட நாங்க வாங்கல. எங்களுக்கு 5000 தான் சம்பளம். ஆனால் இப்ப இருக்கிற பசங்களுக்கு 25 ஆயிரம் வரைக்கும் சம்பளம் தர்றாங்க. அதனாலேயே பழைய நடிகர்களை அவர் விட்டுவிட்டார் “என்று கூறினார். இந்த ஒரு சம்பவம் தான் வடிவேலு கூட நடித்த சக நடிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது.

vadi3

bava lakshmanan

google news
Continue Reading

More in Cinema News

To Top