வாடிவாசலில் அஜித் நடிக்க வாய்ப்பே இல்லை!.. புள்ளி விபரத்தோடு புட்டுவைக்கும் பிரபலம்..

தனக்கென்று தனி ஒரு பாணியை அமைத்து தமிழ் சினிமாவில் தனி ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் அஜித்குமார். துணிவு திரைப்படத்தை அடுத்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் அந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட வாடிவாசல் திரைப்படமாக கூட இருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை எனவும் இதற்கு அஜித் ஓகே சொல்லி இருக்கவே மாட்டார் எனவும் சினிமா விமர்சகர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறியுள்ளார். வாடிவாசல் திரைப்படத்தை தயாரிக்கும் எஸ்.தாணுவிற்கும் அஜித்துக்கும் ஏற்கனவே பல பஞ்சாயத்துக்கள் நடந்துள்ளது.

அதில் முதலாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடிக்கும் போது தான். அப்படத்தை தாணு தயாரிக்க ராஜுவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி,ஐஸ்வர்யாராய்,அஜித்,தபு அப்பாஸ் ஆகியோர் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அப்படம் உருவாகி இருக்கும். முதலில் அஜித் கேரக்டரில் இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் பிரசாந்த். அவர் ஐஸ்வர்யாராய் எனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு தபு தான் ஜோடி என்று சொன்னதும் அதோடு அவர் விலகிக்கொண்டார். அதன் பிறகு இயக்குனர் ராஜீவ் மேனன்தான் தயாரிப்பாளர் தாணுவிடம் விடாப்பிடியாய் நின்று அஜித்தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அஜித் அந்த காலகட்டத்தில் பைக் விபத்து காரணமாக முதுகில் 30க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டு உடல்நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்ததால் படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது போன்ற காரணங்களால் தாணுவிற்கும் அஜித்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

அதன் பிறகு முருகதாஸ் இயக்கத்தின் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படத்தில் முதலில் சூரிய கேரக்டரில் அஜித் நடிப்பதாக இருந்தது. அதற்கு மிரட்டல் என டைட்டில் வைத்து படப்பிடிப்பும் ஆறு நாட்கள் நடந்து முடிந்தது. அதன் பிறகு கஜினி கதாபாத்திரத்திற்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னதும் அஜித் அதுக்கு முடியாது என்று சொல்லி இருக்கிறார். உடனே தாணுவிற்கும் அஜித்திற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு அந்தப் படம் கைவிடப்பட்டது. இது போன்றவைகளால் தான் அஜித்குமார் இனிமேல் தாணுவின் தயாரிப்பில் நடிக்கப் போவதில்லை என உறுதியாக இருக்கிறார். என்று செய்யாறு பாலு நேர்காணலில் கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story