More
Categories: Cinema News latest news

விஜய் படத்தில் திடீர் மாற்றம்.! பதறும் படக்குழு.!

தளபதி விஜய் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வரும் திரைப்படம் “பீஸ்ட்” இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. தற்போது, ரிலீசுக்கான வேலைகள், பாடல் பதிவு எடிட்டிங் என மற்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Advertising
Advertising

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார், சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த தகவல் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதற்கு அடுத்ததாக விஜய் தெலுங்கு தமிழ் என இரு மொழி பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இப்படம் விஜய்க்கு ஆக்சன் திரைப்படமாக இருக்காதாம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்படம் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது, கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நான்கு மாதம் ஷூட்டிங் நடைபெறுமாம் அதன் பின் இப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளோம் என படக்குழு முடிவு செய்துள்ளது அது இல்லை என்றால் பொங்கலை எதிர்நோக்கி காத்திருக்கிறதாம்.

Published by
Manikandan

Recent Posts