Categories: latest news

ARRahman: இசைப்புயல் குடும்பத்தில் ‘வீசியது’ புயல்… விவாகரத்தை அறிவித்தார் மனைவி!

உலகளவில் முக்கிய இசையமைப்பாளர் ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தமிழின் தன்னிகரற்ற கலைஞன், பாடகன் என சொல்லிக்கொண்டே போகலாம். இசைப்புயல் என்று சொன்னாலே அனைவருக்கும் தெரியும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் தற்போது புதிய புயல் வீசியுள்ளது.

29 ஆண்டுகள்

Also read: 300 கோடினா சும்மாவா? தட புடலாக பிரியாணி விருந்து கொடுத்து அசத்திய சிவகார்த்திகேயன்

திருமணமாகி 29 ஆண்டுகள் கழித்து கணவர் ரஹ்மானை பிரிவதாக அவர் மனைவி சாய்ரா பானு அறிவித்து இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு தற்போது இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.

அடுத்த விவாகரத்து

முன்னதாக அவரது மருமகனும், இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மனைவி, நீண்டநாள் காதலி சைந்தவியை பிரிவதாக அறிவித்து புயலை கிளப்பினார். தற்போது அவர்களின் குடும்பத்திலேயே அடுத்த விவாகரத்து சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

திருமணம்

 

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கும், சாய்ராபானுவுக்கும் 1995 மார்ச் 12ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரஹீமா, கதீஜா என்ற இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். ஆஸ்கர் நாயகன் என்றும் அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரகுமான் தான். தற்போது திடீரென சாய்ரா பானு பிரிவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் இவர்களது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

29 ஆண்டுகால திருமண உறவு

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரின் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ.ஆர்.ரஹ்மானுடனான 29 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். தனது வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமையையும், புரிதலையும் வேண்டுவதாகவும் சைரா தெரிவித்துள்ளார்.

 

பிரிவுக்கான காரணம்

ஏ.ஆர்.ரகுமானைப் பிரிந்த மனைவி சாய்ரா பானு பிரிவுக்கான காரணம் குறித்து இப்படி தெரிவித்துள்ளார். தங்கள் உறவில் ஏற்பட்ட மன உளைச்சலுக்குப் பிறகு தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் பதட்டங்களும், சிரமங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

sankaran v

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

2 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

3 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

5 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

17 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

18 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

23 hours ago