Connect with us
rajini

Cinema News

சும்மா இருந்த விஜய்சேதுபதியை உசுப்பிவிட்டதே ரஜினிதானா? அன்னைக்கு அஜித் – இன்னைக்கு இவரா?

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இன்று ஒரு பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு இடம் விடாமல் எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதியின் முகம் தான். அவரை சார்ந்த ரசிகர்கள் ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறார் என்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முழு பேன் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார் விஜய்சேதுபதி. அதுவும் ஹீரோ என்ற தன் வழக்கத்தை மாற்றி முழு நேர வில்லனாகவே மாறியிருக்கிறார் விஜய்சேதுபதி. அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

rajini1

rajini1

இதையும் படிங்க : எத்தன தடவ அடிபட்டாலும் புரியமாட்டீங்குது! ‘தங்கலான்’ படத்திலும் இத்தன கெட்டப்பா? போதும்ணே

ஹீரோவாகா விஜய்சேதுபதியை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு முதலில் ஏமாற்றத்தை தந்தாலும் வில்லன் ரோலில் அவர் கலக்கி வருவதை பார்த்து தலைவா நீ வில்லனாகவே கலக்கு என உற்சாகப்படுத்தி வருகிறார்கள். இப்படி கிடைத்த கதாபாத்திரங்கள், கதைகள் என ஒன்று விடாமல் நடித்து வரும் விஜய்சேதுபதியின் இந்த முடிவுக்கு காரணமாக இருப்பது ரஜினிதான் என்று சொன்னால் யாராவது நம்புவீர்களா?

ஆனால் அதுதான் உண்மை. பேட்ட படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இடைவேளை சமயத்தில் ரஜினியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது விஜய்சேதுபதிக்கு. அப்போது விஜய்சேதுபதியிடம் ரஜினி ‘இப்போ எப்படி போய்க் கொண்டிருக்கிறது?’ என கேட்டாராம். அதற்கு விஜய்சேதுபதி ‘தொடர்ந்து நடித்த படங்கள் ப்ளாப் ஆகின்றது’ என்பது போல கூறினாராம்.

இதையும் படிங்க : விஜயகாந்த போல வீரமா இருந்தா செய்வினை வச்சிடுவாங்க சாமி!.. வைரலாகும் வீடியோ..

அதற்கு ரஜினி ‘ஒரு நடிகன்னா வந்த வாய்ப்பு எதுவாயிருந்தாலும் விடாமல் நடிக்கனும், சம்பாதிக்கிற நேரத்துல சம்பாதிச்சரனும், எதையும் விடாதே ’ என்று சொன்னாராம். அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டுதான் விஜய்சேதுபதி இப்பொழுது வரை பின்பற்றி வருகிறாராம். இதே மாதிரியான ஒரு அறிவுரையைத் தான் அஜித்துக்கும் அப்பவே சொல்லியிருக்கிறார் ரஜினி.

rajini2

rajini2

அதாவது ஒரு படபூஜைக்கு சென்ற போது அஜித்தும் ரஜினியும் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது அஜித் தன்னுடைய நிலைமையை கூறினாராம். அதற்கு ரஜினி ‘ நீங்கள் வேண்டுமென்றால் பில்லா படத்தை ரீமேக் செய்து  நடித்துப் பாருங்கள்’ என்று சொன்னாராம். அதன் பிறகு தான் அஜித்தின் மார்க்கெட் பெரிய அளவு உயர்ந்திருக்கிறது. இந்த சுவாரஸ்ய சம்பவத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top