விக்ரம் பிரபுவுக்கு ஜோடியா நடிக்க சொல்லி ஏமாத்த பார்த்தாங்க.. சர்ச்சை கிளப்பிய விஜய் டிவி விலாசினி!..
![விக்ரம் பிரபுவுக்கு ஜோடியா நடிக்க சொல்லி ஏமாத்த பார்த்தாங்க.. சர்ச்சை கிளப்பிய விஜய் டிவி விலாசினி!.. விக்ரம் பிரபுவுக்கு ஜோடியா நடிக்க சொல்லி ஏமாத்த பார்த்தாங்க.. சர்ச்சை கிளப்பிய விஜய் டிவி விலாசினி!..](https://cinereporters.com/wp-content/uploads/2023/06/vilashini.jpg)
ரேடியோ நிறுவனத்தில் ஆர்.ஜேவாக இருந்து பிறகு சின்னத்திரையில் நடிகையானவர் நடிகை விலாசினி. வானொலியில் ஆர்.ஜேவாக இருந்த விலாசினி சினிமாவில் டப்பிங் செய்வதற்கான வாய்ப்பை பெற்றார். இதுவரை 250க்கும் அதிகமான படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார்.
ஒரு பாடகி ஆக வேண்டும் என்பதே இவரது ஆசையாக இருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் மட்டும் அமையவே இல்லை. ஆர்.ஜே வாக இருந்த இவருக்கு ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற துவங்கினார். அதே சமயம் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் முயற்சி செய்து வந்தார்.
![haasiniofficial](https://cinereporters.com/wp-content/uploads/2023/06/haasiniofficial_342352047_891896611880299_8558132287438198032_n-1024x816.jpg)
haasiniofficial
சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் நாடகங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து பாவம் கணேசன், தவமாய் தவமிருந்து போன்ற நாடகங்களில் இவர் நடித்து வருகிறார்.
ஏமாற்ற முயன்ற நபர்:
சினிமாவில் வாய்ப்பு தேடும்போது நடந்த சர்ச்சைக்குரிய விஷயங்களை இவர் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். சினிமாவில் நடிகர் நடிகைகளை நேரடியாக பட நிறுவனங்களே எடுப்பதில்லை. அதற்கு நிறைய ஏஜென்சி உள்ளன. அவற்றில் பெரும்பாலும் பொய்யான ஏஜென்சிகளே அதிகம் உள்ளன என கூறுகிறார் விலாசினி.
![haasiniofficial](https://cinereporters.com/wp-content/uploads/2023/06/haasiniofficial-819x1024.jpg)
haasiniofficial
அவர் பேட்டியில் கூறும்போது இப்படிதான் ஒரு நபர் என்னிடம் போன் செய்து விக்ரம் பிரபுவிற்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என கூறினார். உடனே நான் யாருடா நீ என கேட்டேன். ஏனெனில் எனக்கே தெரியும், நடித்தால் நான் கொஞ்சம் வயதான கதாபாத்திரத்தில்தான் நடிக்க முடியும். ஆனால் அவர்கள் போன் செய்து என்னை ஏமாற்ற பார்த்தார்கள். இந்த மாதிரி ஆட்களிடம் கவனமாக இருக்க வேண்டும். என கூறியுள்ளார் விலாசினி.
இதையும் படிங்க: படம் ரிலீஸ் ஆக உதவிய எம்.ஜி.ஆர்.. நன்றிக்கடனாக பாரதிராஜா செய்த நெகிழ்ச்சி சம்பவம்!..