ரஜினி கமல் இணையும் புதிய படத்தின் புரோமோ சூட் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 46 வருடங்களுக்கு பிறகு இருவரும் திரையில் ஒன்றாக வர இருக்கிறார்கள். இவர்க இணைந்து கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். இணைந்து நடித்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. அந்த வகையில் மீண்டும் எப்போது சேர்ந்து நடிப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அந்த ஒரு மேஜிக் இப்போது நடைபெற்றிருக்கிறது. அவர்கள் இணையும் படத்தை நெல்சன் தான் இயக்க இருக்கிறார். அதனால் மிகவும் அதிர்ஷ்டசாலியான இயக்குனர் என நெல்சனை கோலிவுட்டில் புகழ்ந்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே ரஜினியை வைத்து நெல்சன் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார்.
கமலுடன் இணைவது இதுதான் முதல் முறை. இந்த புரோமோ ஜெயிலர் 2 படத்தின் புரோமோவை போல் ஃபன்னாக இருக்கப் போகிறது என்று கூறுகிறார்கள். அதாவது ஜெயிலர் 2 படத்தின் புரோமோவில் அனிருத் மற்றும் நெல்சன் இருவரும் காமெடியாக ஒன்று செய்திருப்பார்கள். அதே மாதிரியான புரோமோவாக இது இருக்கும் என்று சொல்கிறார்கள்.
படத்தை பொறுத்தவரைக்கும் மாஸாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் படத்திற்கான அறிவிப்பு தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்று சொல்கிறார்கள். அதற்குள் ரஜினியின் எல்லா முந்தையை படங்களும் முடிந்துவிடும் என்பதால் இந்தப் படத்தில் ரஜினி மிகவும் ரிலாக்ஸாக நடிப்பார் என்று தெரிகிறது.
ரஜினி படம் என்பது வேறு. ரஜினி கமல் இணையும் படம் என்பதால் படத்திற்கான ஹைப்பும் இப்போதிலிருந்தே அதிகமாகிவிட்டது, ரஜினி கமல் ரசிகர்கள் அந்த நேரத்திற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.





