தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகளை நாம் பார்த்து வருகிறோம். அதுவும் 80, 90களில் கரம்பிடித்த பிரபலங்கள் இன்றுவரை தங்கள் குடும்ப வாழ்க்கையை நல்ல படியாக நடத்தி வருகின்றனர். ஆனால் இப்போதைய இளம் தலைமுறை நடிகர்கள் ஒரு சிறு கருத்து வேறுபாடு இருந்தாலும் உடனே விவாகரத்து வரை சென்று நீதிமன்ற வாசலில் நிற்பதை பார்க்க முடிகின்றது.
அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வமணி அவருடைய திருமண வாழ்க்கை குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட செல்வமணிக்கு எதிராக ரோஜாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக பல செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மையிலேயே இவர்கள் திருமணத்திற்கு எந்தவித எதிர்ப்பும் கிளம்ப வில்லை என்பதுதான் உண்மை.
இதை பற்றி செல்வமணி கூறியதாவது முதன் முதலில் ரோஜாவை பார்த்த போதே செல்வமணிக்கு பிடித்துவிட்டதாம். கருப்பு நிறமாக இருந்தாலும் ஏதோ ஒன்று செல்வமணியை ஈர்த்திருக்கிறது. அதனால் ரோஜாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை ரோஜாவிடம் முதலில் சொல்லாமல் நேராக ரோஜாவின் பெற்றோரிடம் அதாவது ரோஜாவின் அப்பாவிடம் போய் சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே ரோஜாவின் அப்பா செல்வமணியின் மிக தீவிரமான ரசிகராம். செல்வமணியின் படங்களினால் ஈர்க்கப்பட்டவராம். அதனால் உங்கள் மகளை எனக்கு பிடித்திருக்கிறது. அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என செல்வமணி ரோஜாவின் அப்பாவிடம் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் ரோஜாவின் ஒரு அண்ணன் எம்.பி.பி.எஸ் மற்றும் இன்னொரு அண்ணன் எம். காம் படித்துக் கொண்டிருந்தார்களாம்.
அதனால் ரோஜாவின் அப்பா ‘ரோஜாவின் அண்ணன்களிடம் கேட்டு சொல்கிறேன்’ என கூற அதன் பிறகு அனைவர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சாதியை வைத்து இவர்கள் திருமணத்திற்கு எந்த பிரச்சினையும் வரவில்லை என செல்வமணி கூறியதில் இருந்தே தெரிகிறது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…