காத்திருந்து வச்சு செய்த கமல்... திணறி திக்குமுக்காடிய அபிஷேக் - வெளியேற்றத்தின் பின்னணி!

by பிரஜன் |   ( Updated:2021-10-25 02:43:21  )
Abhishek
X

Abhishek

அபிஷேக் வெளியேற்றத்தின் பின்னணி இது தான்!

கேங் சேர்ப்பது, பொய் சொல்வது, மற்றவர்களை மட்டம் தட்டுவது, ஜெயிக்கவேண்டும் என்பதற்காக கிரிமினல் புத்தியை யூஸ் பண்ணுவது என ஆரம்பதில் இருந்து பிக்பாஸ் வீட்டில் வெறுக்கப்படும் போட்டியாளராக இருந்து வந்தவர் அபிஷேக்.

யூடியூப் விமர்சகரான இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கட்டின மனையை படுக்கையறை டார்ச்சர் செய்ததால் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டதாக அவரது மனைவி தீபாவே பேட்டி ஒன்றில் கூறினார்.

அதுமட்டுமல்லாமல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அபிஷேக், கமல் ஹாசனை ஒருமையில் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியது. " நீ சிஎம் ஆகணும்னு இந்த 100 நாளில் பண்ற வேளை இருக்கே" என பெரிய தாதா போல் பேசி சீன் போட்டிருந்தார்.

Abhisek

Abhisek

இதை பார்த்து நிச்சயம் கமல் செம கடுப்பாகியிருப்பார். சரியான நேரம் வரட்டும் என காத்திருந்த கமல் நேற்று அபிஷேக்கிடம் பிக்பாஸே பார்த்ததில்லையா என கேட்க," சத்தியமா பார்த்ததில்லை சார் என கூறி திக்குமுக்காடினார்.

அப்புறம் எப்புடி strategy யூஸ் பண்ணி விளையாடுற என கேட்க கமலிடம்... அது வந்து சார்... நான் நீங்க வர வீக் எண்டு ஷோ மட்டும் பார்ப்பேன் என கூறி கதவு சந்துல மாட்டின எலி போல் திணறதிணற கேள்வி மேல் கேள்வி கேட்டு வச்சு செய்துவிட்டு வெளியே அனுப்பினார் கமல்.

Next Story