அடுத்த பிளான் இங்கதான்!… தீயா வேலை பார்க்கும் தனுஷ்?!… பின்ன கையில இவ்ளோ லிஸ்ட் இருக்கே!…

Published on: November 14, 2024
---Advertisement---

இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிக பிஸியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். மற்ற இயக்குனர்களின் திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் தான் இயக்கும் திரைப்படங்களையும் மிக கவனமாக இயக்கி வருகின்றார். 2017 ஆம் ஆண்டு பா பாண்டி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் தனுஷ் அதனை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா பட டிஸ்கஷன் இப்படிதான் நடந்திருக்கும்?!… இப்படி கலாய்ச்சா எப்படி ப்ரோ!.. தரமான செய்கை!..

தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். இதை தொடர்ந்து கடைசியாக தன்னுடைய 50-வது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 100 கோடிக்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்தது.

இதனால் அடுத்தடுத்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். தன்னுடைய மூன்றாவது படமான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கு அடுத்ததாக தன்னுடைய 4-வது படமான இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றார். இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்குவது மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார். நடிகர் தனுஷ் தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருப்பதால் இட்லி கடை திரைப்படத்தை முழு வீச்சில் எடுத்து வருகின்றார். நாளை மதுரையில் இப்படத்தில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Delhi Ganesh: டெல்லி கணேஷ் மறைவால் அவர் வளர்த்த நாயின் நிலைமையை பாருங்க.. வைரலாகும் வீடியோ

விரைவில் இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இணைய  இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. தனுஷின் 55 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்தது. இப்படத்தை தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்திலும், அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும், லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.