Connect with us
tam

Cinema News

உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல! மரண அடி – பொது வெளியில் குத்து வாங்கிய நடிகர்கள்

பொதுவாக நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு சென்றாலே அங்கு ஒரே கலவரம் தான். அவர்களைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். அந்த சூழ்நிலையில் தள்ளுமுள்ளு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் அந்த நடிகர்கள் நடிகைகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இப்பொழுது பார்க்கும் நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்குச் சென்று மக்களிடம் அடிவாங்கி பல்பு வாங்கியதை தான் பார்க்க இருக்கிறோம்.

சம்யுக்தா ஹெட்டே : ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தில் பள்ளி காதலியாக நடித்திருப்பார் சம்யுக்தா. அது தவிர தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் சம்யுக்தா கன்னட படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். ஒரு சமயம் பெங்களூரில் இருக்கும் ஒரு பார்க்கிற்கு உடற்பயிற்சி மேற்கொண்ட போது சம்யுக்தா டைட்டான பிரா லெகின் அணிந்து கொண்டு தனது தோழிகளுடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தாராம். ஒரு சமயம் தான் அணிந்திருந்த பனியனையும் கழட்டி விட்டு வெறும் பிராவுடன் உடற்பயிற்சி செய்து கொண்டதைப் பார்த்த அங்குள்ள ஒரு லேடி சம்யுக்தாவை இப்படியெல்லாம் செய்யக்கூடாது என சொல்லி இருக்கிறார். அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட சுற்றி இருந்த அனைவருமே சம்யுக்தாவிற்கு எதிராக திரும்பி இருக்கின்றனர். அதில் ஒருவர் சம்யுக்தாவின் மூக்கின் மீது ஒரு குத்து விட்டிருக்கிறார். அவ்வளவுதான் உடனே போலீஸ் அங்கு வந்து அந்த பிரச்சனையை சரி செய்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்திருக்கின்றனர்.

sam

sam

சிவகார்த்திகேயன் : மான் கராத்தே ரிலீஸ் சமயத்தில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி செல்வதாக இருந்த சிவகார்த்திகேயன் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கினார். கூடவே கமல், ஹன்சிகா இவர்களும் அதே விமான நிலையத்தில் இருந்திருக்கின்றனர். அப்போது கமல் ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனை படாத பாடு படுத்தி அடித்து விரட்டி இருக்கின்றனர். அதற்கான காரணம் மான் கராத்தே படத்தில் கமலை கலாய்ப்பது போன்ற சில காட்சிகளில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தாராம். அதன் விளைவு தான் கமல் ரசிகர்கள் கோபத்தின் உச்சத்தில் சிவகார்த்திகேயனை அடித்தார்களாம். இதைப்பற்றி கமலிடம் கேட்டால் அப்படியா இது எனக்கு தெரியவே தெரியாதே என சூசகமாக சொல்லி விலகி விட்டாராம்.

sivakarthikeyan

sivakarthikeyan

விஜய் சேதுபதி : பெங்களூரில் ஒரு ஏர்போர்ட்டில் சென்று கொண்டிருந்தபோது விஜய் சேதுபதியின் ரசிகர் ஒருவர் அவருடன் சேர்ந்து செல்பி எடுக்க ஆசைப்பட்டார். அப்போது விஜய் சேதுபதியை சுற்றி அவருடைய உதவியாளர்கள் இருக்க இந்த ரசிகரின் செயலைக் கண்டு அந்த உதவியாளர்கள் இந்த ரசிகரை உதாசனப்படுத்தினார்களாம். அதனால் கோபம் கொண்ட அந்த ரசிகர் பின்னாடி இருந்து ஓடி வந்து அந்த உதவியாளரை தன் காலால் எட்டி உதைத்து இருக்கிறார். கொஞ்சம் தவறி இருந்தால் அது விஜய் சேதுபதியின் மேல் விழுந்திருக்கும். நூல் இலையில் தப்பித்துக் கொண்டார் விஜய் சேதுபதி. ஆனால் அந்த சமயத்தில் பல ஊடகங்கள் விஜய் சேதுபதியை எட்டி உதைத்த நபர் என்ற தலைப்பில் வைரல் ஆக்கிவிட்டனர். ஆனால் உண்மையில் அந்த அடி விஜய் சேதுபதியின் உதவியாளர் மீது பட்டதாம்.

sethu

sethu

விஷால் : இவர்களுக்கெல்லாம் தலைவனாக நடிகர் விஷாலை கூறலாம். ஏனெனில் பல இடங்களில் அடி வாங்கியவர் விஷால்தான்.அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சங்க தேர்தல் சமயத்தில் நடந்தது. விஷால் அணி தலைமையில் நாசர் வெற்றி பெற சரத்குமார் ராதாரவிக்கு எதிராக ஏகப்பட்ட பேச்சுகள் விஷால் பேசி இருந்தார். அதனால் ராதாரவிக்கும் சரத்குமாருக்கும் விஷால் மீது தனிப்பட்ட முறையில் கோபம் அதிகமாகவே இருந்தது. அதை எப்படி காட்ட வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. ஆனால் அதற்கு ஏற்றார் போல தேர்தல் ரிசல்ட் சமயத்தில் சில பேர் கும்பலாக சேர்ந்து விஷாலை கூட்டத்தில் அடித்து துவைத்திருக்கின்றனர்.

vishal

vishal

சுருதிஹாசன் : ஸ்ருதிஹாசன் பொது இடத்தில் அடி வாங்காமல் சைலன்டாக அவர் தங்கியிருந்த வீட்டிற்கே ஒரு நபர் வந்து அவரை அடி அடி என அடித்து கழுத்தைப் பிடித்து இழுத்திருக்கிறார். ஸ்ருதிஹாசன் அவர் அம்மாவுடன் தங்கியிருக்கும் போது திடீரென்று ஒரு நபர் கதவைத் தட்ட நேராக சுருதிஹாசனே கதவை திறந்து இருக்கிறார். அப்போது அந்த நபர் இவருடைய கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து வெளியே போட்டாராம். அந்த நபர் யார் என்று சுருதிஹாசனுக்கு தெரியாதாம். இது பெரும் பிரச்சனையாகி போலீஸ் வரைக்கும் சென்று புகார் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

suruthi

suruthi

google news
Continue Reading

More in Cinema News

To Top